ஒரே நாள் 72 விமானங்களில் 14,058 பேர் வருகை: கேரள முதல்வர்
திருவனந்தபுரம், ஜுன் 26- வெளிநாடுகளில் இருந்து கேர ளத்திற்கான 1114 விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரை 543 விமானங்களும் 3 கப்பல்க ளும் கோவிட் காலத்தில் கேரளத்துக்கு வந்துள்ளன. இவற்றில் 335 சார்ட்டட், 208 வந்தே பாரத் விமானங்களாகும். ஜுன் 30 இல் 400 க்கும் அதிகமான விமானங்கள் வர அனுமதி அளி க்கப்பட்டுள்ளது. வியாழனன்று 72 விமா னங்களில் 14,058 பேர் வர உள்ளனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் புதனன்று நடந்த கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: இந்த நிமிடம் வரை கேரள அரசு ஒரு விமானத்தின் பய ணத்தையும் முடக்கவில்லை. 72 விமா னங்கள் கேரளம்வர புதனன்று அனு மதி அளிக்கப்பட்டது. 14,058 பேர் இந்த விமானங்களில் இன்றே (புதன்) வர உள்ளனர். இவற்றில் ஒன்று தவிர மற்ற 71 விமானங்களும் வளைகுடா நாடுக ளில் இருந்து வருபவையாகும். நமது மக்கள் சொந்த நாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காகவே இத்தனை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப் பட்டது.
கண்காணிப்பில் 14 நாட்கள்
வெளிநாடுகளில் இருந்து கேர ளத்துக்கு வருவோர் நோய் பரவ லைத் தடுக்க அனைத்து விதமான பரி சோதனை நடவடிக்கைகளுக்கும் உட்பட வேண்டும். இவற்றை முறை யாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து பயணம் தடைபடாமலும், ஒத்தி வைக்கப்படாமலும் வெளிநாடுகளில் உள்ள கேரளியரை சொந்த ஊர்க ளுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் பரிசோதனை முடிவுகள் எதுவாக இருந்தாலும் கேரளத்தில் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருப்பது கட்டாயமாகும். பயணிகள் ‘கோவிட்-19 ஜாக்ரதா’ இணைய தளத்தில் பதிவு செய்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் கூறினார்.
வாய்ப்புள்ள நாடுகளில் இருந்து வரு வோர் பரிசோதனைக்கு உட்பட்டு, சான்றிதழ் பெற வேண்டும். பய ணத்திற்கு 72 மணி நேரத்துக்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும். கடந்த 20 ஆம் தேதி முதல் பய ணிகளுக்கு பரிசோதனையை கட்டாய மாக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த தேதி 25 ஆக மாற்றப்பட்டது. இதனிடேயே மத்திய வெளியுறவு அமைச்சரகம் தலையிட்டு இதில் ஒரு முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. வெளியுறவு அமைச்சரகம் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களுடன் தொடர்பு கொண்ட பிறகு அறவித்துள்ள விவர ங்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் கூறினார்.
தீவிர கட்டுப்பாடுகள்
வளைகுடாவிலிருந்து வருகிறவர்க ளின் பாதுகாப்புக்காக விமான நிலை யங்களில் கேரள சுகாதாரத்துறையின் நெறிமுறைகளுக்கு ஏற்ப கண்டிப்பான பரிசோதனைகள் நடத்தப்படும். நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் கூடுதல் பரிசோதனைக்காக மருத்துவம னைகளில் அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் பரிசோதனை நடத்தாத அனைத்து பயணிகளும் அவர்க ளுக்கு நோய் அறிகுறி இல்லை என்றா லும் இங்கு வந்ததும் ராப்பிட் ஆன்றி பாடி சோதனைக்கு உட்பட வேண்டும். சோதனையில் நோய் உறுதி செய்யப்ப டுவோர் ஆர்டி பிசிஆர் அல்லது ஜீன் எக்ஸ்பிரஸ் அல்லது டூ நாட் ஆய்வுக்கு உட்பட வேண்டும். விமான நிலையங்களில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதி ராக பேரிடர் நிவாரண சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பய ணிகள் பயன்படுத்தும் பிபிஇ கருவி கள், கையுறை, முக கவசம் போன்றவை விமான நிலையத்தில் இருந்து பாது காப்பாக அகற்றப்படும். வெளிநாடு வாழ் கேரளியர் அதிக அளவில் வருவ தால் நான்கு விமான நிலையங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.
திரும்பிவரும் வெளிமாநில தொழிலாளர்கள்
கேரளத்திலிருந்த சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். ரயில் மூலம் மற்ற மாநிலங்களில் இருந்து வருகிற வர்களின் ஆவணங்கள் போன்வற்றை சோதனையிட எல்லை ரயில் நிலை யங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிறவர்கள் தனிமை கண்கா ணிப்புக்கு அனுப்பப் படுகிறார்கள். அனு மதிச் சீட்டு இல்லாமல் வருகிறவர்கள் என்றால் ஒப்பந்ததாரர் விவரங்கள் சேக ரிக்கப்பட்டு அவர்களது பொறுப்பில் தனிமைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் பயண அனுமதி இல்லா மலும் ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்ததாரர் இல்லாத நிலையிலும் உள்ள சிலரை ரயில் நிலையங்களில் இறக்கி விடும் சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களை திரும்பிச் செல்லும் ரயில்களில் ஏற்றி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களை கட்டுப்பாட்டு முகாம்க ளுக்கு அனுப்ப வேண்டும். எந்த மாவட்டத்திற்கு அவர்கள் செல்ல வேண்டுமோ அங்குள்ள ஆட்சி நிர்வா கம் அவர்களுக்கு தனிமையில் இருக்க வசதி செய்திட வேண்டும். தனிமைக் காலம் முடிந்த பிறகு அவர்கள் இங்கேயை வேலை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.