சென்னை,ஜூன் 22- தமிழ்நாடு முன்னாள் முத லமைச்சர் கலைஞர் கருணாநிதி யின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப் பட்டிருந்தது. பேனா நினைவுச் சின்னம் தொடர் பான தமிழ்நாடு அரசின் விண்ணப் பத்தை ஏற்று ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், இப்போது ஒன்றிய அரசின் கட லோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப் பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்த னைகளுடன் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப் பியிருக்கிறது. தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திரு ப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரை வில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.