சென்னை, ஏப்.15- நீண்ட தூர விரைவு ரயில்களில் முன்பதிவு முன்னுரிமை இருக்கை ஒதுக்கீடுகளில் மாற் றுத் திறனாளிகளுக்கு பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து இரயில்வே வாரியம் மார்ச்-31 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி தூங்கும் வசதி பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணத் திற்காக 2 கீழ் படுக்கைகளும், அவர்களின் உதவியாளர்களுக்கு 2 நடு படுக்கைகளும் என்ற அடிப்படையில் 4 முன்னுரிமை இடங்கள் சலுகை கட்டணத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். 3 அடுக்கு குளிர்சாதன ஒரு கீழ் படுக்கை மற்றும் ஒரு நடு படுக்கை முன்னுரிமையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதைப்போன்று 3 அடுக்கு குளிர் சாதன பெட்டிகள் இணைக்கப்படாமல், 3 அடுக்கு சிக்கன குளிர்சாதன பெட்டிகள் மட் டுமே இணைப்பட்டிருந்தால் இப்பெட்டிகளில் ஒரு கீழ் மற்றும் ஒரு நடு படுக்கை முன்னுரி மையில் ஒதுக்கப்படும். ஏழைகளின் இரதம் என அழைக்கப்படும் முழுமையாக குளிர்சாதன பெட்டிகள் இணைக் கப்பட்ட சிக்கன கட்டண கரீப் ராத் இரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில்களில் ஒரு கீழ் மற்றும் நடுப்படுக்கை ஒதுக்கீடு செய்யப் படும். மேலும், இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் குளிர்சாதன இருக்கை பெட்டிகள் ஒரு இரயிலில் 2 பெட்டிகளுக்கு மேல் இணைக்கப் பட்டிருந்தால், இப்பெட்டிகளில் தலா 2 இருக்கைகள் முழுமையான கட்டணத்தில் முன்னுரிமையில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த புதிய உத்தரவை பின்பற்றுவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு உரிய அறிவுரை கள் வழங்கவும், வாய்ப்புள்ள வழிகளில் இச் செய்தியை பொதுமக்கள் அறியும் வகையில் கொண்டு சேர்க்கவும் அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களும் நடவடிக்கை எடுக்க ரயில்வே வாரியம் வலியுறுத்தி உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் விமர்சனம்..
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலை வர் எஸ்.நம்புராஜன் ரயில்வே வாரியத்தின் இந்த புதிய உத்தரவு குறித்து தெரிவிக்கை யில், ரயில்வே வாரியம் இதுபோன்ற விதி முறைகள் குறித்த உத்தரவுகளை அவ்வப் போது பிறப்பித்து வருகிறது. 2022 செப்டம்பர் மற்றும் 2017 ஜூலையில் முன்னதாக உத்தரவு கள் பிறப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. ரயில்வே வாரியத்தின் இந்த புதிய உத்தரவு மூலம் முன்பதிவு இருக்கை வசதி கொண்ட விரைவு ரயில்களில் 2 ஆம் வகுப்பில் 2 மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் 2 இருக்கைகள் புதி தாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதனை வரவேற்கிறோம். ஆனால், விரைவு ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் 2 கீழ் மற்றும் 2 நடு படுக்கை களும் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் ஒரு கீழ் மற்றும் ஒரு நடுப்படுக்கை சலுகை கட்ட ணங்களில் முன்னுரிமை ஒதுக்கீடுகளாக வழங்க வேண்டும் என்பது தற்போது நடை முறையில் உள்ளவைதான். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. சதாப்தி, தேஜஸ், புதிதாக இயக்கப் படும் வந்தே பாரத் போன்ற இரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணத்து டன் முன்னுரிமை இடஒதுக்கீடுகளும் வழங்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், இந்த புதிய உத்தரவின் மூலம் ராஜ்தானி மற் றும் துரொந்தோ இரயில்களில் நடைமுறை யில் உள்ள 25 சதவீத சலுகையையும், தூங் கும் வசதி பெட்டிகளில் 4 படுக்கைகள் மற்றும் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் 2 படுக்கை ஒதுக்கீடுகளையும் இரயில்வே வாரியம் பறித் துள்ளது. முன்பதிவில்லாத மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு பெட்டிகளை கரீப் ராத் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளாக மாற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.