தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் பணி ஆணைகள் மனைகளுக்கு கிரைய பத்திரங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று(ஜூன் 10) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடியிலான 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.