சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல் சென்னை, ஜூன் 13- மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் 10 சதவீத இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப் படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற வேண் டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலி யுறுத்தியுள்ளார். காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இடபிள்யூஎஸ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தமிழகத்தில் இதுவரை 69 சதவீத இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால் மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் எம்எஸ்சி பயோ டெக் படிப்பிற்கான விண்ணப்பத்தில் இடபிள்யுஎஸ் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத் தக்கதல்ல. இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் விளக்கம் கேலிக்கூத் தானது. இந்த அறிவிப்பினை உட னடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.