அகில இந்திய வேலை நிறுத்த விளக்க தெருமுனை பிரச்சாரம்
ருச்சிராப்பள்ளி, மே 15- மே 20 ஆம் தேதி, 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அன்று திருச்சி தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஸ்ரீரங்கத்தில் புதனன்று தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்திற்கு ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் வெங்கட் நாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், தொமுச ஜோசப் நெல்சன், மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், எல்எல்எப் தெய்வீகன், பெடரேசன் சிவசெல்வம், எச்எம்எஸ் ஜான்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சிவாஜி சண்முகம், தொமுச மாவட்டத் தலைவர் குணசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.