சேலம், ஏப்.20- தமிழ்நாட்டில் புரை யோடிப் போயுள்ள சாதி வெறியை வேரறுக்க அனைத்து சமூகத்தினரும், அரசியல் கட்சிகளும் கள மிறங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் காதல் திருமணம் செய்து கொண்ட மகன் சுபாஷை தந்தை தண்டபாணி கொடூர மாக வெட்டி படுகொலை செய்தார். தடுக்க வந்த தனது தாயையும் படுகொலை செய்தார். இச்சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்க ளுடன் சுபாஷின் மனைவி அனுசுயா சேலம் அரசு அதி நவீன மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அனுசுயா மற்றும் அவரின் குடும்பத் தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனுசுயாவின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற் பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட அந்த பெண்ணு க்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதால், தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் சேலம் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். சாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்ற தோடு, திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை யும் தண்டபாணி, சரமாரி யாக வெட்டியுள்ளார். அந்த அளவிற்கு சாதி வெறி ஆட்டிப் படைக்கிறது. எனவே, அனைத்து சமூக மக்களும் சாதி வெறியை எதிர்த்துப் போராட வேண்டும்.
தனிச் சட்டம் அவசியம்
சுபாஷ் – அனுசுயா தம்ப திக்கு நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு முதல்வர் இதனை உடனடி யாக நிறைவேற்ற வேண் டும். அப்போது தான் சாதி வெறியைத் தூண்டி விடுப வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சமுதாயத்தில் ஆழ மாகப் புரையோடியுள்ள சாதி வெறியை எதிர்த்துப் போ ராடாமல், அரசியல் கட்சி கள் மவுனம் காக்கக் கூடாது. சாதி வெறி அடங்கா விட்டால் இந்த கொடுமை தொ டர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எனவே, பள்ளிக் கூடத்தில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சமூ கத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி வெறியை வேரறுக்க கள மிறங்க வேண்டும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு, சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்க டபதி, எம்.குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.