தூத்துக்குடி,டிச. 25 தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக் கப் பணிகள் 2023 ஆம் ஆண்டுக்குள் முழு மையாக முடிவடையும் என விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை தென் மாநில விமான நிலையங்களின் திட்ட பொதுமேலாளர் ஸ்ரீ கிருஷ்ணா, விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி செலவில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் 2023 ஆம் ஆண்டுக் குள் முழுமையாக முடிவடையும். அதன் பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு விமான சேவை தொடங்கும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான ஓடு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரவு நேர விமான சேவை தொடங்கும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 2021-2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டத்திலும் ஒரு லட்சத்துக்கும் மேலான பயணிகள் பயணித்துள் ளனர். ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலியாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக் கவசம் அணியாமல் வருகை தந்தால் ரூ.250 வரை அபராதம் விதிக் கப்படும். மேலும், ஒமைக்ரான் தொற்று கண்ட றிய தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நிலையம் அமைக்க அனுமதி கோரி உள்ளோம் என்றார்.