அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த அதிமுக
பாஜகவின் எல்லாவிதமான நிர்ப்பந்தங்களுக்கும் பணிந்து ஒரு அடிமைச் சாசனத்தை எழுதிக் கொடுத்து சரணாகதி அடைந்துள்ளது அதி முக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை பாட்டிலோ அல்லது ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டிலோ ஒரு துளி யளவு கூட மாற்றம் இல்லாத நிலை யில், தமிழ்நாட்டிற்கு முற்றாக துரோ கமிழைத்து பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கான தேவை அதிமுகவுக்கு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தீக்கதிருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 2026 தேர்தல் நெருங்குவதை யொட்டி அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி என்று திடீரென அறிவித்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் செய்தியா ளர்களை சந்திக்கிறார்கள்; ஆனால், கூட்டணி என்று அமித் ஷாதான் அறிவிக்கிறார்; எடப்பாடி பழனிசாமி வாய்மூடி மவுனியாக அமர்ந்திருக்கிறார். கூட்டணி என்று அறிவிக்கிற உரிமையைக் கூட எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா தரவில்லை. அந்தளவுக்கு, அதி முக அடிமைநிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறது என்பதே உண்மை. இரு கட்சிகளும் கூட்டணி சேர் வதற்கான காட்சிகளும், நாடகங்க ளும் கடந்த சில நாட்களாக அரங் கேற்றப்பட்டன. எடிப்பாடி பழனி சாமி தில்லி பயணம் மேற்கொண் டார். கூட்டணி பேச்சுக்காக இல்லை என்றார்கள். ஆனால் திடீரென அமித் ஷாவை சந்தித்தார். அதன் பிறகும், கூட்டணிக்காக இல்லை என்று சொன்னார். ஆனால், அடுத் தடுத்த நகர்வுகள் அரங்கேறி கூட்ட ணியை அறிவிப்பதற்காகவே அமித் ஷா வந்து சேர்ந்தார். எடப் பாடி பழனிசாமி எந்த உறுதியும் அளிக்காமல், எப்படி அமித் ஷா வந்தார்? நமது கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டில் இப்படியொரு கூட்டணியை இவர்கள் மீண்டும் அமைத்துக் கொள்வதற்கான தேவை என்ன எழுந்தது என்பது தான். தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாகவும், தேசிய அளவி லான பிரச்சனைகள் தொடர்பாக வும் பாஜகவின் நிலைபாட்டிலோ, அவர்களது அரசின் நிலைபாட் டிலோ எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை. மாநில உரிமை களுக்கு எந்த மதிப்பும் இல்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக் கும் விதமாக, தொகுதி மறுவரை யறை செய்யப் போவதாகவும் அறி வித்துள்ளனர். ஆக, பாஜக தனது நிகழ்ச்சி நிரலில் எதையுமே மாற்றிக் கொள்ளாத நிலையில், என்ன நோக் கத்திற்காக அதிமுக அவர்களிடம் சரணாகதி அடைந்துள்ளது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷா கூறியிருக்கி றார். அப்படியானால், அதிமுக கூட் டணி ஆட்சி என்பதை அதிகா ரப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறதா? அறிவித்துவிட்டதா? எனவே, பாஜகவின் எல்லாவித மான நிர்ப்பந்தங்களுக்கும், மிரட் டல்களுக்கும் பணிந்து அதிமுக ஓர் அடிமை சாசனத்தை எழுதி கொடுத் திருக்கிறது என்பதுதான் உண்மை. எல்லா வகையிலும் பாஜக விடம் அதிமுக சரணடைந்திருக்கி றது என்று சொன்னால், தமிழ் நாட்டில் அக்கட்சியின் பலம் மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கி றது என்றே பொருள். முற்றிலும் தமிழ்நாட்டின் மக்க ளுக்கும், நலன்களுக்கும் எதிரான மோசடிக் கூட்டணி இது. ஏற்கனவே தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள், கூட்டணி என்ற பெயரில் வந்தாலும் துடையெறியப்படுவார் கள் என்பது நிச்சயம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.