புதுக்கோட்டை, பிப்.4- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் செம்ப டையின் பிரம்மாண்டமான பேரணியுடன் சனிக்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழு வதும் இருந்து பல நூற்றுக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், செம்படைத் தோழர்கள் சனிக்கிழமையன்று மாலை புதுக்கோட்டையில் குவிந்தனர். புதுக் கோட்டை பால்பண்ணை ரவுண்டானா வில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 10 சீருடைப் பெண்களின் கொடி அணி வகுப்பு, செண்டை மேளம் உள் ளிட்ட பல்வேறு வகையான ஆட்டக்கலை கள், வான வேடிக்கைகள், விண் அதி ரும் கொள்கை முழக்கங்களுடன் பேரணி திலகர்திடல், பழநியப்பா முக்கம், மேல ராஜவீதி, தெற்கு நான்காம்வீதி, அண்ணா சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பேரணியில் அகில இந்திய, மாநிலத் தலைவர்களைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக பல்லாயி ரக்கணக்கானோர் அணிவகுத்து வந்த னர்.
பேரணியானது பொதுக்கூட்டம் நடை பெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவ டைந்தது. பொதுக்கூட்டத்திற்கு விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநிலச் செய லாளர் அ.பழநிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாநில பொரு ளாளர் எஸ்.சங்கர் வரவேற்க, வரவேற் புக்குழு பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விழுது குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.