தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு, விவசாய நிலங் கள் கையகப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி தேவைதான்; அது மக்களுக்கான வளர்ச்சியாக இருக்க வேண்டும். மக் களை வறுமைக்குள் தள்ளி, விரட்டும் நிலைக்கு ஆளாக்கக் கூடாது. பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட வற்றுக்கு நிலம் கையகப்படுத்தும் வழி முறைகளை தமிழக அரசு வகுக்க வேண் டும். நெய்வேலியில் கூட, சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் ஆயிரக்கணக்கா னோர் பேரணியாக திரண்டு, இன்னும் தங்களின் நிலத்திற்கு உரிய தொகை மற் றும் கூறியபடி வேலை வழங்கவில்லை என போராட்டம் நடத்தினர். தமிழக அரசும் இதில் கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்திற்கு உட்பட்டு, மக்களிடமிருந்து நிலத்தைப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏராளமான சீர்திருத்த வாதிகள் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இடதுசாரி, திராவிட, முற்போக்கு அரசியல் இயக்கங்கள் சாதி வெறியை ஒழிப்பதற்கான போராட்டங் கள் நடத்தியும் சாதி ஒழிந்த பாடு இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில், தலித் மக்க ளுக்கான குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கொடுமை நடந்துள்ளது. இந்த அசுத்த நீரை குடித்த அப்பகுதி மக்கள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்க்கு ஆளாகினர். இத்தகைய உச்சக்கட்ட கொடுமைகள் அரங்கேறும் நிலையும் உள்ளது. சேலம் கோயிலில் இந்து அறநிலை யத் துறை சார்பாக மதிய உணவு வழங்கும்போது சாதி ஆதிக்க சக்திகள் சில பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத னையடுத்து அந்த கோவிலை பூட்டி வைத்துள்ளனர். இதிலிருந்து தீண்டாமை இன்னும் நீங்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழக அரசு உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து கொடுக்க வேண்டும் எனக் கோரி பல இடங்களில் கரும்பு விவ சாயிகள் போராடுகின்றனர். இதனை அரசு கவனத்தில் எடுத்து, விவசாயிகளி டம் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்.
திருவாரூரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...