ரூ.18 ஆயிரம் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
சாம்சங் ஊழியர் ஊதிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னை, மே 19 - சாம்சங் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்மூலம் தொழிலாளர்களுக்கு 18ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும். ‘சாம்சங் இந்தியா’ நிறுவனத்தில் சிஐடியு தலைமையில் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை 2024ஆம் ஆண்டு தொழிலாளர்கள் அமைத்த னர். பெரும்பான்மை தொழிலாளர் களைக் கொண்ட இந்த சங்கத்தை அங்கீகரிக்க மறுத்த நிர்வாகம், போட்டி அமைப்பை உருவாக்கியது. தொழிலாளர் துறையும் சங்கத்தை பதிவு செய்ய மறுத்தது. இதற்கெதி ராக தொழிலாளர்கள் பல கட்ட இயக்கங்களை நடத்தினர். உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். 38 நாட்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அரசு நிர்வாகத்தின் மோசமான அடக்குமுறைகளை மீறி தொழிற்சங்க பதிவை தொழிலாளர்கள் பெற்றனர். உலகளவில் பல்வேறு நாடுகளில் சாம்சங் நிறுவனம் ஆலை அமைத்திருந்தாலும் எந்த நாட்டிலும் தொழிற்சங்கம் கிடையாது. இந்தியா வில் தமிழகத்தில் மட்டுமே தொழி லாளர்கள் போராடி தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டினர். அதன்பிறகும், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் 25 பேரை நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்தது. மேலும், நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட அமைப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கியது. ஒரே வேலையை செய்யும் தொழிலாளர்களுக்கு இரு வேறு ஊதியத்தை வழங்கி தொழி லாளர்களை வஞ்சித்தது.
5 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை
இந்த சட்டவிரோத, பழிவாங்கும் நட வடிக்கைக்கு எதிராக தொழி லாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி யதுடன் தொழிலாளர் நலத்துறை அலு வலகத்தில் தொழிற்தாவாவும் எழுப்பி னர். இதில் பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் திங்களன்று (மே 19) பேச்சுவார்த்தை நடைபெற்றது. காலை 11 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறைச் செயலாளர் வீரராகவன், ஆணையர் ராமன், கூடுதல் ஆணையர் யாஸ்மின் பேகம், துணை ஆணையர் கமலக்கண்ணன், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் அ.சவுந்தரராசன், தலைவர் இ.முத்துக்குமார், செயலா ளர் எல்லன், பொருளாளர் மாதேஷ், நிர்வாகத் தரப்பில் மனிதவள அதிகாரி மேரி பிளாரன்ஸ் யாசினி, மக்கள் தொடர்பு அதிகாரி கண்ணன், தொழி லாளர் தொடர்பு அதிகாரிகள் பார்த்திபன், சதீஷ், சட்ட ஆலோசகர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
ரூ.18 ஆயிரம் ஊதிய உயர்வு
அதன்பின் அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “தொழி லாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் 9 ஆயிரம் ரூபாயும், 2026-27 மற்றும் 2027-28 ஆண்டுகளுக்கு தலா 4500 ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் நேரடி சம்பள உயர்வு கிடைக்கும்” என்று அறிவிக்கப்பட்டது. “அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு மூன்றாண்டு காலத்திற்கு ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு முறை சிறப்பு பதவி உயர்வாக 31.03.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர் களுக்கு சிறப்பு பதவி உயர்வு அளிக்கப்படும். கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர் களுக்கு பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகளும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
25 பேருக்கு மீண்டும் வேலை: அமைச்சர்
இதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகை யில், “25 தொழிலாளர்களின் தற்காலிக பணி நீக்கம் குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
அனைத்தையும் எதிர்கொள்வோம்: சவுந்தரராசன்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறுகையில், “தொழிற்சங்கம் தொடங்குவதை சாம்சங் நிறுவனம் விரும்பவில்லை. இப்போதும் ஏற்கத் தயாராக இல்லை. ஆனாலும், சாம்சங் இந்தியா தொழிற் சங்கத்தோடு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளது. கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாவிடில் தொழில் அமைதி இருக்காது. இந்த நிறுவனம் 16 ஆண்டு கால மாக அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதிய உயர்வு கொடுத்ததில்லை. தொழிற்சங்கம் 9 ஆயிரம் ரூபாய் என்று கோரிக்கை வைத்து, தற்போது 18 ஆயிரம் ரூபாய் கொடுக்க வைத்துள்ளோம். இதுதவிர ஊக்கத்தொகை போன்றவற்றை சேர்த்து தொழிலாளர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். திருமண விடுப்பு, மரண விடுப்பு, பிரசவ விடுப்பு போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈமச்சடங்கு நிதி 5 ஆயிரம் ரூபாயி லிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார். போட்டி சங்கம் எடுபடவில்லை “போட்டி அமைப்பை உருவாக்கி, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி யில் நிர்வாகம் வெற்றி பெறவில்லை. ஏனெனில், பெரும்பான்மை தொழி லாளர்கள் சங்கத்தின் பக்கம் உள்ள னர். நிர்வாகம் ரகசிய தேர்தலை நடத்தி னால் அதனை எதிர் கொள்ளவும் தயாராக உள்ளோம். இந்த ஒப்பந்தத் தின் மூலம் ஒரே ஆலையில், இரண்டு சம்பளம் என்ற முறை முடிவுக்கு வந்துள்ளது” என்றும் அவர் கூறினார். “25 தொழிலாளர்கள் தற்காலிக நீக்கம் புதிதல்ல; எதிர்கொள்வோம்; முறியடிப்போம். நிர்வாகத்தோடு நேரடியாக பேசி 25 பேரின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அது முடியாவிடில், 25 தொழிலாளர்களின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்யும் முறை தொழிற்சங்கத்திற்கு தெரியும். மிகப் பெரும்பான்மை தொழி லாளர்களின் கோரிக்கைகளை வெற்றி யடையச் செய்ய வேண்டும் என்பது தான் 25 தொழிலாளர்களின் விருப்பம். அதுதான் தொழிலாளி வர்க்கத்தின் குணம். அந்த 25 தொழிலாளிகளை பாது காக்க வேண்டியது தொழிற்சங்கத்தின் பொறுப்பு. அதைச் செய்வோம். 25 தொழிலாளர்களின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்வதுதான் அடுத்தபணி” என்றும் சவுந்தரராசன் கூறினார்.