tamilnadu

img

பாரதிதாசனுக்கு பிறகு அதிக சந்தங்களை கையாண்டவர்

கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக் கட்டளை தொடக்கவிழா ஜன.4 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு வும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்நிகழ்வில் கவிஞர் ஈரோடு தமி ழன்பன் வாழ்த்துரை வழங்கினார். “பிராங்பர்ட் விமான நிலைய வாயிலில் ஒரு கவிஞரின் சிலையை வைத்துள்ளனர். அதுபோன்று சென்னை விமான நிலையம் முன்பு வள்ளுவர் அல்லது இளங்கோவடி களுக்கு ஏன் சிலை இல்லை? பாப்லோ நெருடா இறந்தபோது சிலி நாட்டில் அவர் பிறந்த கிராமத்தின் பெயரையே ‘பாப்லோ நெருடா’ என அந்நாட்டு அரசு மாற்றியது. அந்த கிராமத்தின் தெருக்களுக்கு, அவரது நூல்களின் பெயரை சூட்டியது. தமிழ கத்தில் ஒரு பல்கலைக் கழகத்திற்கு, பூங்கா விற்கு அல்லது தெருவிற்காவது கவிஞர் பெயரை சூட்டுகிறார்களா?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “கவிஞர் தமிழ்ஒளி பயின்ற கரந்தைப் புலவர் கல்லூரியில்தான் நானும் பயின் றேன். எனக்கு தமிழ் கற்பித்த பாவலரேறு ச.பாலசுந்தரனாரும், கவிஞர் தமிழ்ஒளியும் ஒன்றாக படித்தவர்கள். அவர் எனக்கு ஆசிரியர் என்றால், தமிழ்ஒளியும் எனக்கு ஒருவகையில் ஆசிரியர்தான். ஷேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில் சொல்வார் பைத்தியக் காரர்கள், கவிஞர்கள், காதலர்கள் எல்லாம் ஒன்று என்று. அப்படிப்பட்ட தமிழ்ஒளியை அரவணைத்து, தேற்றி, ஊக்குவித்து, வளர்த்தெடுத்தவர் சஞ்சீவி என்ற ஒப்பற்ற மனிதர். ஜெயகாந்தனுக்கு தமிழ்ஒளி நெருக்கமானவர். ஒருநிகழ்வில் தமிழ்ஒளி குறித்து ஜெயகாந்தன் பேசுகையில், தமிழ் ஒளியை என் நண்பன் என்பேனா, சகோ தரன் என்பேனா, ஆசிரியன் என்பேனா என்றார்.

41வயதில் அரிய சாதனைகளை செய்துவிட்டு சென்றவர் தமிழ்ஒளி. ஏராள மான கவிதைகளை எழுதினார். பாரதி தாசனுக்கு பிறகு அதிகமான சந்தங்களை கையாண்டவர் தமிழ் ஒளிதான்” என்று குறிப்பிட்டார். “பாரதிதாசன் மாணவர்கள் என்று 40க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். பாரதிதாசனிடம் இருந்து பொதுவுடமைப் பார்வையும், பெரியாரியப் பார்வையையும் பெற முடியும். அந்த பரம்பரையில் முதல் வரிசையில் முடியரசன், வாணிதாசன், சுரதா, தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இருந்தனர். இவர்களில் பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரமும், தமிழ்ஒளியும் பொதுவுடமைச் சிந்தனையைப் பெற்று வளர்ந்தனர். பாரதி தாசனை பின்பற்றி தமிழ்ஒளியை எவரும் சொல்வதில்லை. அரசியல்வாதிகள் கவி ஞர்களை சூறையாடிவிட்டார்கள். பாரதி தாசனை ஒப்புக்கொள்கிறவர்கள் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பட்டுக்கோட்டையை ஏற்பவர்கள் பாரதிதாசனை விலக்கி வைத்துப் பேசுவார்கள். பெரியாரியப் கட்சி, பொதுவுடமைக் கட்சி என்ற பிரித்த காலம் மாறிவிட்டது. பொதுவுடமைவாதிகளும், பெரியாரியவாதிகளும் ஒத்த நிலையில் இருந்து கவிதைகளை பார்ப்பதும், மதிப்பீடு செய்வதும், கருத்துக்களை முன்வைப்பது மான நல்ல திறனாய்வாளர்களை மார்க்சிய போக்கிலிருந்து பார்க்க முடிகிறது. அதில் ஒருவர் சிகரம் ச.செந்தில்நாதன்” என்று பாராட்டினார்.

“கவிஞர்களின் நூல்களை நாட்டுடமை யாக்குவது, பரிசுகளை தருவதுபோல, ஆண்டுக்கு 2 படைப்பாளிகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் செலுத்தி பல்கலைக் கழகங்களில் அரசே அறக்கட்டளைகளை தொடங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார். தமிழகத்தில் முதன்முதலில் வீராயி என்கிற தலித் நாட கத்தை தமிழ்ஒளி படைத்தார். தலித்தியம் என்ற சொல்லாடல் அம்பேத்கரை ஒட்டி பிறந்த ஒன்று. தலித்தியம் என்ற பெயர் வராத காலத்திலேயே இதனை அவர் செய்தார். ஆராய்ச்சியாளராகவும், சந்தப் புலவனாகவும், சமூக சிந்தனை மிக்கவ ராகவும் திகழ்ந்தார். தமிழ்ஒளியின் புகழை பரப்புவோம். அறக்கட்டளை சிறந்த பணி யாற்றி கருத்தரங்குகளை நடத்த வேண்டும். அவற்றை நூலாகப் பதிப்பிக்க வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அவரது கவிதைகளை இடம்பெறச் செய்ய வேண் டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்ஒளி சாதியால் புறக்கணிக்கப்பட்டார்
முனைவர் இ.சா.பர்வீன்சுல்தானா தமது வாழ்த்துரையில், “தமிழ்ஒளியின் அனைத்துப் படைப்புகளும் செ.து.சஞ்சீவி யால் பதிப்பாக்கம் செய்யப்பட்டுவிட்டது. அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். கல்விபுலத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருக்கை கள் அமைப்பதும், அதுதொடர்பான சில முன்னெடுப்புகளை பல்கலைக் கழகமும், அரசாங்கமும் சேர்ந்து செய்ய வேண்டி உள்ளது” என்று குறிப்பிட்டார். “சென்னை பல்கலைக் கழக பாடப்புத்த கத்தில் இருந்த கவிஞர் தமிழ்ஒளியின் ‘மாதவி காவிய’த்தை எடுத்துவிட்டார்கள். தமிழ்ஒளி படைப்புகள் பல்கலைக்கழகப் பாடங்களில் வந்ததற்கும், வெளியே சென்றதற்கும் பின்னால் உள்ள அரசியல் என்ன? ஆக்கங்களுக்கு பின்னால் ஒரு அடையாளம் காணும் அரசியல் எப்போது இல்லாமல் போகிறதோ அப்போதுதான் படைப்புகள் முழுமையாக அடுத்த தலை முறையைச் சென்று சேரும். எந்த சாதியை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாகாது என்கிற தமிழ்மரபை முன் னெடுத்துச் செல்வோம்” என்று குறிப்பிட்டார். பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து என்று பட்டியலிடுகையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை விட்டுவிடுவதிலும் ஒரு அரசியல் பின் புலம் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் பெருங்கவி ஈரோடு தமிழன்பனை குறித்து பேசாததற்கும் ஒரு பின்புலம் இருக்கிறது.

ஆய்வு புலங்களை முன்னெடுப்பதன் வாயி லாக மட்டுமே படைப்புகள் பொதுமக்கள் வரை சென்று சேர முடியும் என்று குறிப்பிட்ட அவர், கண்ணதாசன் பற்றி புகழ்பாடுகிற வர்கள் பட்டுக்கோட்டையை பற்றி பேசு வதில்லை.  பட்டுக்கோட்டைக்கு சென்னையில் ஒரு சிலை கிடையாது. ஒரு தெருவுக்கு கூட அவர் பெயர் கிடையாது. பல்கலைக் கழகங்களில் அவரது பெயரில் இருக்கை கிடையாது. 26 வயதில் கவிதை எழுதத் தொடங்கி 29 வயதில் இறந்துபோன அந்த மகாகவி, பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பாடல்களை தந்துவிட்டு போனார். 1982ஆம் ஆண்டு சென்னை வானொலியில் பேட்டி கொடுத்த எம்ஜிஆர், “என் முதல்வர் நாற்காலியில் மூன்று கால் கள் யார் என்று எனக்கு தெரியாது. நான்கா வது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்த ரம்” என்றார். கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞர்தான். ஆனால், அதற்கு முன்பு பட்டுக் கோட்டை என்ற கண்ணியும், அதற்கும் முன்னாள் தமிழ்ஒளி என்ற கண்ணியும் இருக்கிறது” என்றார். “பாரதி, பாரதிதாசன் வரிசையில் தமிழ் ஒளியை சொல்வதற்கான அரசியல் நம்மிடம் இல்லை. பிரச்சாரங்களில்தான் இலக்கி யத்தை பரப்ப முடியும் என்று தமிழ்ஒளி நம்புகிறார். நாம் பிரச்சாரம் செய்கிறோமா? பாரதி அளவுக்கு பாரதிதாசன் பிரச்சாரப் படுத்தப்படவில்லை. கண்ணதாசனை முன்னெடுக்கிற அளவுக்கு பட்டுக்கோட் டையை முன்னெடுப்பதில்லை.

பொதுத் தளத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் விழிப் படையாததால் பலரை இருட்டடிப்பு செய் கிறார்கள். மக்கள் விழிப்படையும்போது இருட்டுப்பக்கம் வெளிச்சத்திற்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்ஒளியின் சித்தாந்தம் மானுடம். வைதிக மரபை எதிர்ப்பது. சாதி கடந்து யோசிக்க வேண்டிய ஆளுமை தமிழ்ஒளி. கவிஞர்கள் சாகலாம் அவர்களது கவிதை கள் சாகாது. கவிஞர்களுக்கு இழி மரணம் ஏற்படலாம். ஆனால் அவர்களது கவிதை களுக்கு இழிமரணம் ஏற்படால் பாதுகாக் கும் பணியை தமிழ் இலக்கியத்துறையும், நூற்றாண்டு விழாக் குழுவும் செய்கிறது என்று குறிப்பிட்ட பர்வீன் சுல்தானா, தமிழ் ஒளி, பெரிதாக படிக்கவில்லை. ஆனால் பல்கலைக் கழகங்கள் பாடங்களாக வைக்கிற அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார். தமிழ்ஒளி நமது அனைத்து பருவங்களிலும் நுழைந்து வெளியேறும் படைப்புகளை தந்த மகாகவி என்று புகழ்மாலை சூட்டினார்.

தொகுப்பு: செ.கவாஸ்கர்