சென்னை, ஜன.12- ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது தமிழ்நாடு மக்களை இழிவுபடுத்தும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதனன்று (11.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற் குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 20.01.2023 அன்று ஆளுநர் மாளி கையை முற்றுகையிடும் போராட்டம் நடத்து வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்களின் பதவி யை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை மிரட்டியும், உருட்டியும் அரசி யல் குழப்பத்தை நடத்தி வருகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநி லங்களில் இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஆளுநர்கள் மூலம் கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி இத்த கைய அரசியலமைப்பு விரோத நடவடிக்கை களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் சனாதன கருத்துக்களை பரப்புவது, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை களை ஆதரிப்பது, தமிழ்நாட்டின் பாரம்பரி யம், கலாச்சாரம் இவற்றிற்கு எதிராக சர்ச்சைக் குரிய கருத்துக்களை பேசுவது, ஐ.ஏ.எஸ். அதி காரிகள் ஒன்றிய அரசிற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டுமென்பது, ‘ தமிழ்நாடு ’ என்ற பெயரை ஏற்க மறுப்பது, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை ஆகிய மசோதாக்கள் உள்ளிட்டு 21 மசோ தாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது ஆகிய வற்றை செய்து வருகிறார். மேலும், ஒரு முழு நேர அரசியல்வாதியாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி தலையீடுகள் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அச்சிட்டுக் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் சில பகுதிகளை நீக்கியும், தனது சொந்த கருத் துக்களை திணித்தும், மதிப்புமிக்க தலை வர்களின் பெயர்களை உச்சரிக்காமலும், தமிழ் நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங் களையும் வாசிக்காமலும், அவை மரபினை கடைப்பிடிக்காமலும், சட்டசபையின் மாண் பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளு நர் செயல்பட்டு தேசிய கீதம் இசைக்கும்முன் வெளியேறியது என்பது 8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமா கும். ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தங்க ளின்படி தமிழ்நாட்டில் ஒரு போட்டி அர சாங்கத்தை நடத்துகிற வகையில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் ஆளுநர். அவரின் இத்தகைய செயல்களைக் கண் டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத் தில் முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு அறை கூவல் விடுகிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வானதி சீனிவாசனுக்கு பதிலடி
இவை உள்ளிட்ட தீர்மானங்களை விளக்கி, சென்னையில் வியாழனன்று (ஜன.12) நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதுதொடர்பான கேள்விகளுக்கு கே.பால கிருஷ்ணன் பதிலளித்தார். தமிழ்நாடு ஆளுநரை மாநில அரசு சட்ட மன்றத்திற்கு அழைத்து அவமானப்படுத்தி உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ஆளுநர் தமிழ்நாடு மக்களை அவமதித்தது குறித்து அவர் கவலைப்பட வில்லை. தமிழக சட்டமன்ற மாண்புக்கு அவ மானத்தை உருவாக்கியது ஆளுநர்தான். ஆளு நரைச் சட்டமன்றத்தில் யாரும் அவமதிக்க வில்லை. அரசு முறைப்படி அவருக்கு அழைப்பு விடுத்தது, முறையாக வரவேற்றார்கள். ஆளு நர் உரை அவருக்கு அனுப்பப்பட்டு, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதை முறையாகப் படித்துவிட்டுச் சென்றிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒப்புதல் அளித்து விட்டு, மரபை மீறி சிலவற்றைப் படிக்காமல் தவிர்த்துள்ளார் என்றால் என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டையும், சட்ட மன்ற மாண்புகளையும் அவமானப்படுத்திய ஆளுநருக்கு வானதி சீனிவாசன் வக்காலத்து வாங்குவது தமிழ்நாடு மக்களை இழிவு படுத்தும் செயல் என்றும் கூறினார்.
பகிரங்கமாகப் பேசலாமா?
இந்த சட்டமன்றத்தின் தலைவர் ஆளுநர். அதனடிப்படையில் அமைச்சரவையுடன் இணைந்து ஆளுநர் செயல்பட வேண்டும் எனச் சட்டம் கூறுகிறது. ஆனால் ஆளுநர் கோயம்புத் தூரில் நடைபெற்ற காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், மாநில அரசின் தாம தத்தால் தீவிரவாதம் உருவாகும் எனப் பேசி யிருக்கிறார். சட்டமன்றத்தின் தலைவராக இருக்கக் கூடிய ஆளுநரே அப்படிப் பேச லாமா? அவர் அரசிடம் அல்லவா இப்படி நடை பெற வாய்ப்புள்ளது என்று ஆலோசனை கூற வேண்டும். நேரடியாக ஆளுநர் எதை வேண்டு மானாலும் பேசலாம், செய்தியாளர்களிடம் கூற லாம் என்றால் என்ன அர்த்தம்?
ஆபத்தான விளக்கம்
தமிழ்நாடு என்ற பெயரையே நான் பயன் படுத்த மாட்டேன் என ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு, மக்களுக்கும் ஏற்பட்ட அவ மானம் இல்லையா? காலம்காலமாக பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று தான் இருக்கும். அதை ஏன் இந்த முறை மாற்ற வேண்டும்? மேலும் ஒன்றிய அரசு உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு என்றிருப்பதை இப்போது ஏன் தமிழகம் என மாற்ற வேண்டும்? மேலும் அவர் அதற்கு அளிக்கும் விளக்கம் மிக வும் ஆபத்தானது. தமிழ்நாடு என்றால் அது தனி நாடு போல் தெரிகிறது. இந்தியா என்பது தான் நாடு எனக் கூறுகிறார். நாடு என்று பெயர் இருந்தாலே அது தனி நாடா? கேரளாவில் கூட வயநாடு என்று உள் ளது. எனவே அது தனி மாநிலமா? ஆளுநர் வேண்டுமென்றே வம்பிழுக்கும் செயலை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து ஏன் அண்ணாமலையோ, பாஜகவினரோ கவலைப் படுவதில்லை. ஆளுநரின் எடுபிடியாக அண்ணாமலை செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் மாண்புகளை, அர சியல் விழுமியங்களை நசுக்கக் கூடிய செய லாக உள்ளது. எனவே இதை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும் என பாலகிருஷ் ணன் கேட்டுக் கொண்டார்.
அதிமுக மவுனம் காப்பது ஏன்?
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதி முக எதுவும் பேசவில்லையே என்ற கேள்விக்கு, “ஒன்றிய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதி ராகவும் குரல் கொடுக்கும் தன்மையை அதிமுக இழந்து விட்டது. அதிமுகவின் குருவாக மோடி யும், ஒன்றிய ஆட்சியாளர்களும் உள்ளனர். ஆளுநரை எதிர்த்தால் மோடியை எதிர்ப்ப தற்குச் சமம் என்று கருதி அவர்கள் ஆளுநரை எதிர்க்க மாட்டார்கள். தமிழ்நாடு என்னும் பெய ரைப் பயன்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறிய பிறகும், அதிமுக கண்டிக்காமல் மவுன மாக உள்ளது. மோடி அரசின் எடுபிடியாகச் செயல்படுகிறது” என்று பாலகிருஷ்ணன் சாடி னார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலக் குழு உறுப்பி னர் ஆறுமுக நயினார் ஆகியோர் உடன் இருந்த னர்.