சென்னை, அக்.11- தமிழ்நாடு சட்டப் பேரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கட்கிழமை (அக்.9) கூடியது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குறுகிய கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தம், பட்டுப்புழு விதை (உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) திருத்தம், தமிழ்நாடு இயக்கக் ஊர்திகள் வரி விதிப்பு, கூட்டுறவு சங்கங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து சட்டப் பேரவைவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஒத்திவைத்தார்.