நாகப்பட்டினம், ஜன.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழுவின் சார்பில் தீக்கதிர் நாளிதழுக்கு 151 ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. சந்தா தொகைக்கான ரூ.2,68,500 ஐ, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபாலிடம் வழங்கினார். நிகழ்வில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜோதி பாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.