சென்னை, ஜூலை 16- “கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள்” என நடிகர் சூர்யா மாணவர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்வியால் மட்டுமே சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலமாக இன்று வரை ஏராளமான மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பல்வேறு உதவிகளை செய்து வரு கிறார். ஆண்டுதோறும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட கனவுகளை அடைந்திருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) நடை பெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப் பிற்கு அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை நடிகர் சூர்யா வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “சாதி, மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங் கள். ஒருவர் வீண் சொல், பழிசொல் பேசி விட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. அனைவருக்கும் சரி யான சமமான கல்வி கொடுக்க அகரம் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது. கல்வி மூலம் வாழ்க்கையைப் படியுங் கள், வாழ்க்கை மூலம் கல்வியைப் படி யுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியும். இதுபோன்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.