கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் நடிகர் சுரேஷ் கோபி. இவர் மக்கள் சந்திப்பின் போது, மணிப்பூரைப் பற்றி ஏன் பேசவில்லை என்று பாதிரியார் லிஜோ சாலிஷேரி கேட்டபோது சுரேஷ்கோபி திகைத்தார். பாதிரியார் தொடர்ந்து கேள்வி களை எழுப்பினார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லா தது குறித்தும், அங்குள்ள கிறிஸ்தவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் பாதிரி யார் பேசினார். சுரேஷ்கோபி பதில் சொல்ல முடியவில்லை. மாறாக, கோபமடைந்து வெளி யேறினார். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல், பிரச்சாரக் களத்தில் இருந்து விடுப்பு எடுத்து வீட்டுக்கு ஓடினார். குடும்ப காரணங் களுக்காக என்று கூறி சுரேஷ்கோபி விடுப்பு எடுத்தார். இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவார் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.