சென்னை, பிப். 20- ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் திரவ உயிர் உரம் வழங்கப்பட்டு, வேளாண் பயிர் களுக்கு ஆதாரம் அளிக்கப்படும். பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். இதன் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர். 14,000 ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ் நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங் களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்கு விப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைத்தல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க மண்வள அட்டை வழங்குதல், ஒருங் கிணைந்த உர மேலாண்மை செய்யப்படும். வேளாண் கண்காட்சிகள் 2023-24 ஆம் ஆண்டில் சென்னையிலும், திருச்சியிலும் நடத்தப்பட்ட வேளாண் கண்காட்சிகளுக்கு விவசாயிகள், பொதுமக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து, 2024-2025-ஆம் ஆண்டிலும், மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும். இதற்கென ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.