tamilnadu

img

அமைச்சர் திடீர் ஆய்வு: பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை

சென்னை,டிச.15- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வியாழனன்று (டிச.15) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார் வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்  சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.  மேலும், சித்தா பிரிவு,  அறுவைச் சிகிச்சை அரங் கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம்  உள்ளிட்ட  அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது  எவ்வித முன்அறிவிப்பு மின்றி விடுப்பு எடுத்த மகப்பேரு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை  பிரபா வடிவுக்கரசி, எலும்பு  முறிவு துறை ஹர்ஷா பாலாஜி, தொண்டை, காது,  மூக்கு சிறப்பு மருத்துவர் கிருத்திகா ஆகிய 4 பேர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும்,  இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, நலப்பணிகள் இணை இயக்குநரை வேறு  மாவட்டத்திற்கு பணி யிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக  நலப்பணிகள் இயக்கு நருக்கு உத்தரவிட்டார்.