tamilnadu

தமிழ்நாடு முழுவதும் சிஐடியு மறியல்....

எவ்வகையிலும் ஏற்க முடியாதது. சாம்சங் போலவே அனைத்து தொழிற் சாலைகளிலும் நிறுவனத்தின் பெயரை முன்வைத்துதான் தொழிற் சங்கம் இருக்கிறது. 90 விழுக்காடு தொழிற்சங்கங்கள் அப்படித்தான் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  ஸ்டாப் யூனியன் என்ற தொழிற்சங்கத் தை கர்நாடகாவில் பதிவு செய்ய  மறுத்தார்கள். இது தொடர்பான வழ க்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துகிறவர், நீங்கள் செய்கிற அதே தொழிலை செய்கிறாரா; உங்களுக்கு போட்டி யாக வருகிறாரா; அசோசியேஷன் போட்டி வங்கியா நடத்தப் போகிறது என்று கேட்டு நிர்வாகத்தின் வாதத்தை தள்ளுபடி செய்தது.

தொழிற்சங்கத்தோடு பேசித்தான் ஆக வேண்டும்!

சாம்சங் என்கிற பெயரில் தொழி லாளர்கள் தொழிற்சாலையா நடத்தப் போகிறார்கள்? இதே வாதத்தை முன்வைத்து உயர்நீதி மன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுத் துள்ளது. நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாத நிர்வாகம் வாய்தா  வாங்கி உள்ளது. ஆகவே, தொழிற்சங்க பதிவையும், தொழிற் சங்க உரிமையையும் பெறுவோம். நிறுவனத்தில் உள்ள 85 விழுக் காடு தொழிலாளர்கள் ஒரே தொழிற் சங்கத்தில் உள்ளனர். இந்த சங்கத் தோடு சாம்சங் நிர்வாகம் பேசித்தான் ஆகவேண்டும். ஒப்பந்தம் போட்டுத் தான் ஆகவேண்டும். தொழி லாளிக்கு முன்னாள் மண்டியிட்டுத் தான் ஆகவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

டிகே.ரங்கராஜன்

மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் போராட்டத்தை வாழ்த்தி பேசுகையில், “21ஆம்  நூற்றாண்டின் மிகமிக முக்கிய மானப் போராட்டமாக சாம்சங் போராட்டம் உள்ளது. இந்தியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவது என்பது சாதாரணமானது அல்ல. நவீன தாராளமயத்தில், அரசுக்கும், மூல தனத்திற்கும் வித்தியாசமில்  லாத காலமாக மாறியுள்ளது.  சாம்சங் என்ற பெயரில் மக்கள்  பொருட்களை வாங்கிக் கொள்ள லாம். ஆனால், தொழிலாளி அந்த பெயரில் தொழிற்சங்கம் வைக்கக் கூடாதா?  “சாம்சங் போராட்டத்தை தமிழ கத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் ஆதரிக்கின்றன. தமி ழக அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும்” என்று கூறினார்.  இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், துணைப் பொதுச் செய லாளர்கள் வி.குமார், கே.ஆறுமுக நயினார், துணைத் தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செய லாளர்கள் எம்.சந்திரன், கே.சி. கோபிகுமார் மாவட்ட நிர்வாகி கள் எம்.தயாளன், சி.திருவேட்டை  (மத்திய சென்னை), கே.பால கிருஷ்ணன் (தென்சென்னை), எஸ்.கே. மகேந்திரன், ஆர்.ஜெயராமன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.