சென்னை,நவ.26- கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலையொட்டி ஆவின் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்தியாவின் ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக் கப்படும் மருத்துவர் வர்கீஸ் குரியன் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி, தேசிய பால் தினமாக 2014 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படு கிறது. தேசிய பால் தினத்தையொட்டி, சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தின கொண்டாட்டம் மற்றும் விற்பனை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆவின் குறித்த சிறந்த வாக்கியங்கள் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 5 போட்டியாளர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப் பட்டது. அதேபோல், நீண்ட காலமாக ஆவின் பால் அட்டையை இணைய தளம் மூலமாக பெற்று வருகின்ற சிறந்த நுகர்வோர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் பேசியது வருமாறு:-
பண்டிகை காலங்களில் பொது மக்கள் விரும்பும் வகையில் பல்வேறு விதமான பால் பொருட்களை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளியின்போது ஆவின் நிறுவனம் பொதுமக்களின் விருப்பத் துக்கேற்ப காஜூகட்லி, காஜூ பிஸ்தா ரோல், நெய் பாதுஷா, மோத்திபாக் மற்றும் நட்ஸ் அல்வா போன்ற புதிய இனிப்பு வகைகளை விற்பனை செய்துள்ளது. இந்த இனிப்புகள் பொதுமக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. அதேபோன்று எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும். பொங்கலின்போது பொது மக்களுக்கு ஆவினின் 100 மில்லி நெய் பாட்டில்கள் எவ்வித இடர்பாடு மின்றி கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களின் பால் விலை யுடன் ஒப்பிடும்பொழுது ஆவின் பால் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும். வரும் கோடை காலங்களில் ஆவின் நிறு வனத்தின் ஐஸ்கிரீம் வகைகள், மில்க் ஷேக் குளிர்பான வகைகள், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்கவும், பொது மக்களுக்கு தங்குதடையின்றி வழங்க வும் துரித நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.