நாகப்பட்டினம், மே 30 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.லாசர், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகி யோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சி களிலும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தலைஞாயிறு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, கடைவீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பேரூராட்சி அலு வலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி உரையாற்றினார்.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.லாசர் உரையாற்றுகை யில், தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சி களில் 37 பேரூராட்சிகளுக்கு முதற்கட்டமாக நூறு நாள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், விவசாயத் தொழி லாளர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்ற னர். மாவட்டத்திற்கு ஒவ்வொரு பேரூராட்சி என, ஒரு பேரூராட்சியை தேர்ந்தெடுத்து இத்திட்டத் தை அமல்படுத்தினார்கள். ஆனால் அதற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் திட்ட மானது செயல்பாடு இன்றி இருக்கிறது. இதுகுறித்து சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பேசினார்கள். 2020-21இல் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. 2022-23 ஆண்டுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வில்லை. தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகளிலும் சுமார் 30 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பெருந் தொற்று காலக்கட்டத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையை அனுபவித்து வந்தார்களோ, அதே நிலையிலேயே தற்போதும் வாழ்ந்து வரு கிறார்கள். மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ இதுபற்றி எந்த கவலையுமின்றி புதிய நாடாளுமன்றம் கட்டி, செங்கோல் நாட்டி திறப்பு விழா செய்தது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்று சொன்ன மோடி, ஏழை மக்களின் ஜனநாயகம், சமத்துவம், வாழ்வா தாரத்தை பறித்து வருகிறார். அவர் பேச்சுக்கும், செயலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசி டம் இருந்து பற்றாக்குறையான நிதியை கேட்டு பெற வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகிறது. நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியை கணிசமாக குறைத்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறார் கள். தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளி லும், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முதல் பேரூ ராட்சியாக அறிவிக்கப்பட்ட கீழ்வேளூர் பேரூ ராட்சிக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக செவ்வா யன்று தலைஞாயிறு பேரூராட்சியில் ஆயி ரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமும் மனு அளிக்கிறோம்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் எம்.முரு கையன், சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.