புதுக்கோட்டை, அக்.19- நாடு, கடல், மொழி, இனம், எல்லை களைக் கடந்து மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்பட விழா நமக்கு உணர்த்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7 ஆவது உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் அக்.14 முதல் 18 வரை நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் செவ்வா யன்று பங்கேற்று ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: சமீபத்தில் தமிழில் முற்போக்குக் கருத்துகளைத் தாங்கி வரும் படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் திரைப்பட விழாவை நடத்துவதன் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட் டம் தனி முத்திரை பதித்துள்ளது. தமு எகசவின் இத்தகைய நகர்வு பண் பாட்டுத் தளத்தின் அழுத்தமான பதி வாகப் பார்க்கிறேன். இங்கே திரையிடப்பட்ட படங்கள் கடல், நாடு, மொழி, இனம், எல்லை களைக் கடந்து மனிதம், மாண்பு, அன்பு, அறம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மானுடம் பொதுவானது என்பதை உணர்த்துகிறது. காதல் திரு மணம், மறுமணங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்க ளுக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலை நாடுகளில் இவை மிக இயல்பாக நடப் பதை இப்படங்கள் நமக்கு உணர்த்து கின்றன. உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்தில் இந்துக் களும், முஸ்லீம்களும் என 53 பேர் படு கொலை செய்யப்பட்டனர். ஓராண் டுக்கு முன்பாக நடைபெற்ற விவசாயி கள் போராட்டத்தில் அனைத்து மதங் களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிக மான விவசாயிகள் பங்கேற்றனர். மோடி அரசை பணியவைத்து வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற்றனர். ஆனால், அதற்குப் பிறகு நடை பெற்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத் தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதி லிருந்து வெறுப்பு அரசியல் வறுமை யைத் தோற்கடித்து விட்டது என்பதை உ.பி. தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. எனவே, பண்பாட்டுத் தளத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்கள் பயனளிக்கும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசி னார்.