tamilnadu

img

நாகப்பட்டினத்தில் வரவேற்புக் குழு அமைப்பு

நாகப்பட்டினம், பிப். 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நாகப்பட்டினத்தில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி தலை மையில் நடைபெற்றது. நாகப்பட்டி னம் மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து வரவேற்புக்குழு செயலாளர், நாகை மாலி தலைவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணி யன் பொருளாளர் உட்பட 340 பேர்  கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது. தொடர்ந்து அகில இந்திய மாநாட்டிற்கான நிதி திரட்டல், செம் படை பேரணி, விளம்பரப்படுத்துதல், வெண்மணி ஜோதி எடுத்தல், தீக்கதிர் சிறப்பு சந்தா இயக்கம் நடத்துவது பற்றி விரிவாக பேசப்பட்டது.  மார்ச் மாதத்தில் கீழையூர் ஒன்றி யத்தின் சார்பில் திருக்குவளையில் அகில இந்திய மாநாட்டின் முக்கியத்து வம் குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செய லாளர் விஜூ கிருஷ்ணன்  உள்ளிட்டோர் பங்கெடுக்கும் அந்த கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  நிறைவாக அகில இந்திய மாநாட்டு தயாரிப்புப் பணி குறித்தும், தற்போ தைய அரசியல் நிலைமை குறித்தும் மத்தியக் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார்.

கே.பாலகிருஷ்ணனுக்கு வாழ்த்து

முன்னதாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் கே.பால கிருஷ்ணன் அவர்களுக்கு 73ஆவது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.