மாற்றுப் பணியில் வந்து அரசுப் பள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்
தஞ்சாவூர், ஜூன் 4 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி உடையார் தெரு பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் செ.இராம நாதன். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் பணி யிடம் காலியாக இருப்பதால், இப்பள் ளிக்கு மாற்றுப் பணிக்கு வந்துள்ளார். இவர் இப்பள்ளிக்கு வந்த பின்பு ஏராளமான மாற்றங்களை செய்துள்ளார். கோவை ஆக்கம் அறக்கட்டளையை அணுகி பள்ளி மாணவர்களுக்கு நாற்காலிகளை அன்பளிப்பாக பெற்று உள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் இ.வீ.சந்திரமோகனை தொடர்பு கொண்டு டீ சர்ட், பேண்ட் அன்பளிப்பாக பெற்றுள்ளார். இந்தப் பள்ளி 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, ஆண்டு விழா நடைபெறவில்லை. இவர் இந்தப் பள்ளிக்கு பொறுப்பேற்ற பின்பு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, ஊர் பொது மக்கள் உதவியுடன் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தினார். ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றதால் இந்த ஆண்டு புதிதாக ஐந்து மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப் பட்டனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலை யில் மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி சாரட் வண்டியில் மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். பொறுப்பு தலைமையாசிரியர் செ. இராமநாதன் வரவேற்றார். மாணவர் களுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் புத்தகங்கள், சீருடைகள் நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் சாருமதி நன்றி கூறினார்.