tamilnadu

img

வியர்வைத் துளிகளாலான மகத்தான சாதனை - சு.பொ.அகத்தியலிங்கம்

அறுபது ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடும் தீக்கதிர் நாளேடு தன் ஐந்தாவது பதிப்பை நெல்லையில் செப்.22 அன்று தொடங்குவது கண்டு பெரிதும் மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன் . ஊடக உரிமை கடுந்தாக்குதலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகி உள்ள காலத்தில் - ஊடக நேர்மை அக்னிப் பரிட்சையாக இருக்கும் சூழலில் -  ஊடகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகி கடும் சவாலாக உள்ள பின்னணியில்; உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஓயாது குரல் கொடுக்கும் தீக்கதிர் ஐந்தாவது பதிப்பு காண்பது வியர்வைத் துளிகளால் பொறிக்கப்படும் மகத்தான சாதனை ஆகும். தீக்கதிர் சிறப்பு ஆசிரியர், பொதுமேலாளர், ஆசிரியர் தொடங்கி வீடுவீடாய் தீக்கதிரை கொண்டு சேர்க்கும் பணிவரை  தன்னலமின்றி பாராட்டை எதிர்பார்க்காமல், விமர்சனத்தால் முடங்காமல் ஐந்து பதிப்பிலும் உழைக்கும் தோழர்களுக்கு முன்னாள் தீக்கதிர் ஊழியனின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். வாழ்த்துகள். ஏற்கெனவே உழைத்து ஓய்வு பெற்றுவிட்ட, விடை பெற்றுவிட்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்தும் நன்றியும் . நீலக்கடல் முத்தமிடும் குமரி முனைவரை தீக்கதிரின் வெளிச்சம் பற்றிப்பரவ வாழ்த்துகள்! வாழ்க தீக்கதிர் ! படர்க ஊடக உலகில் உண்மையின் பேரொளி !