மனிதனின் பேராசைக்கு ஆறு, ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, நேரம் வாய்க்கையில், இழந்ததை மீட்க, தாயைப் பிரிந்த குழந்தை, திடீரென தாயைக் கண்டதும் பரவசமாய் பாய்ந்தோடி வந்து கட்டியணைப்பது போல், தன்னை மீட்டுருவாக்கம் செய்து விடுகிறது இயற்கை. அப்படி ஆக்கிரமிப்புகளால் அடையாளத்தை இழந்த ஒரு குளம், மீண்டெழுந்து ஆயிரக் கணக்கானோரை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது வெள்ளளூர் குளம். இந்தியாவில் எமதருமனுக்கே கோவில் கட்டி வழிபடும் வெள்ளளூரில், தன்னார் வலர்களின் முயற்சியால் புதுப்பித்துக்கொண்டுள்ளது இந்த வெள்ளளூர் குளம். இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், "இந்த வெள்ளளூர் குளம் 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரு காலத்தில் வற்றாத குளமாக இருந்தது. ஆனால், நாளடைவில், பல்வேறு ஆக்கிர மிப்புகளாலும், ராஜ வாய்க்கால்கள் தூர் வாரப்படாத தாலும், வெள்ளலூர் குளம் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு போனது. நகரத்தை ஒட்டி உள்ளது இந்த பகுதி என்றாலும், இங்குள்ள சூழல், பட்டாம் பூச்சிகள், பறவை களின் வருகை இருந்து கொண்டேயிருந்தது. எங்கெல் லாம் பட்டாம் பூச்சிகள் வாழுகிறதோ, அது வளமான பகுதி என அடையாளப்படுத்துவர். எனவே இந்த குளத்தை மீட்டுருவாக்கம் செய்வது என தன்னார்வலர் கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தோம். இதனையொட்டி எடுக்கப்பட்ட முயற்சி களின் பயனாக ராஜ வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதை யடுத்து குளத்திற்குத் தண்ணீர் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பறவைகளும் வந்ததால் இப்பகுதி ரம்மிய மாகக் காட்சி அளிக்கிறது. இக்குளக்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மாயாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைச் செடிகள், பட்டாம்பூச்சிகளைக் கவ ரும் பல்வேறு செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வெள்ளலூர் குளத்துக்குப் பட்டாம்பூச்சிகளின் வருகையும் அதிகரித்தது.
தற்போது பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு காலம் என்பதால் அதிகளவிலான பட்டாம்பூச்சிகள் வந்துள் ளன. கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. இந்நிலையில், ஒரே இடத்தில் 104 வகையான பட்டாம்பூச்சிகளை காண்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே 6 மாதங் களுக்கு ஒருமுறை பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்வு நடக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது பட்டாம்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி, சிறுவாணி, ஆனைமலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏற்காடு, பச்சமலை, கொல்லிமலை, கல்வராயன் மலைகளுக்குச் செல்கின்றன.
அதுபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில் அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடம் பெயர்வு நடப்பது வழக்கம். அதன்படி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு துவங்கி உள்ளது. அதனால், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவு பட்டாம்பூச்சி களைக் காண முடிகிறது. குறிப்பாக நீர் நிலைகள், காடுகளில் பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்வைக் காண முடிகிறது. இதில், வெள்ளலூரில் உள்ள பட்டாம் பூச்சி பூங்காவில் அதிகளவிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதால் அதனைக் காணப் பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வருகின்றனர். அதேநேரத்தில், இந்த இடம் பொழுது போக்கு வதற்கான இடமல்ல, கல்வி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இடம் என்பதை, பூங்காவின் வாயி லில் நுழையும் போதே தெரிவித்து விடுகின்றனர். இந்த பூங்காவில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக் கிழமையில் அனுமதியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறப்பு அனுமதியும் பெற்று எல்லா நாளும் அனுமதிக்கப்படு கின்றனர். இப்படி வருபவர்களுக்கு, பட்டாம் பூச்சி களின் அழகில் வானம் விரிகிறது என்கிற அறிவியல் உண்மையையும் உரக்கச் சொல்லி விடுகின்றனர். உலகம் முழுவதும் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாம் பூச்சி வகைகள் உள்ளதாக இதுவரையிலான கணக்கெடுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் 1350க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி வகைகளும், மேற்குத்தொடர்ச்சி மலையில் 250க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி வகைகளும், தமிழகத்தில், 327 பட்டாம் பூச்சி வகைகளும் உள்ளன. இதில், இந்த வெள்ளளூர் குளத்தில் மட்டும் 104 வகையிலான பட்டாம் பூச்சி குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இங்கு, ஃபுளூ டைகர், டார்க் ஃபுளூ டைகர், காமன் குரோ, டபுள்-பிராண்டட் குரோ, டாப்பிலிடியே, காமன் ஜே, டெய்ல்டு ஜே, காமன் ரோஸ், கிரிம்சன் ரோஸ், சவுத்திரன் பேர்டு விங், காமன் மோர்மன், புளு மோர்மன், லைம் பட்டர்ப்ளை, த்ரி ஸ்பாட் கிராஸ் எல்லோ, காமன் கிராஸ் எல்லோ, ஸ்மால் சால்மன் எராப், கிரிம்சன் டிப் உள்ளிட்ட 104 வகையான பட்டாம் பூச்சிகளை இங்கு ஒரே இடத்தில் காண்பது கண்களுக்கு விருந்தாக அமைகிறது. பட்டாம் பூச்சிகளும், தேனீக்களும் எங்கு அதிகமாக வாழ்கிறதோ, அதுவே மனிதன் வாழ்வதற்கு உகந்த சூழல் உள்ள இடம் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.