tamilnadu

img

ஒரே நேரத்தில் 20 வேலைகள் மட்டுமே 100 நாள் வேலையை தகர்க்கும் புது உத்தரவு

திருவனந்தபுரம், ஜுலை 30- வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 1ஆம்  தேதி முதல் ஒரு ஊராட்சியில் ஒரே நேரத்தில் 20 பணிகளை மட்டுமே எடுக்க முடியும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது 2005ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு குடும்பத் திற்கு ஆண்டுக்கு 100 வேலை நாட்கள் கட்டாயமாக்கப்பட்ட வேலை உறுதிச் சட்டம் ஒன்றிய அரசால் ஒழிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை ஆண்டுதோறும் 100 வேலை நாட்களை உறுதி செய்வதற்குத் தேவையான உற்  பத்தி மற்றும் சொத்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநி லத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட் டது. இதைத்தான் புதிய உத்தர வின் மூலம் ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. கேரளாவில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது 14 முதல் 24 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக ஒரே நேரத்தில் 10  வேலைகள் வரை எடுத்து, வேலை கேட்ட அனைவருக்கும் மத்திய சட்டப்படி 100 வேலை நாட்கள் உறுதி செய்யப்பட்டது.

மாநிலத்தில் 16.45 லட்சம் குடும்பங்களில் 18.99 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பெரிய ஊராட்சிகளில் 5000 தொழிலாளர்கள் வரை உள்  ளனர். ஒரே நேரத்தில் ஒரு வார்டில் பல்வேறு பணிகளை மேற் கொள்ள முடியாததால், சட்டப்படி  அவர்களுக்கு வேலை நாட்கள்  கிடைக்காது. அதிக வார்டுகள் உள்ள பஞ்சாயத்தில், கூலித்தொழி லாளிக்கு, 100 கூலி நாட்களில் கால்  வாசி கூட கூலி கொடுக்க முடி யாது.

ஒன்றிய அரசு நடப்பாண்டுக் கான பட்ஜெட்டில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி சட்  டத்தை செயல்படுத்த ரூ.73 ஆயிரம்  கோடி ஒதுக்கியது. இது கடந்த ஆண்டு (2021-22) ஒதுக்கீடு செய்யப்பட்ட 98,000 கோடியில் 25 சதவிகிதம் குறைவாகும். இதற்  கும் முந்தைய 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தது ரூ.1,11,169.53 கோடி. நாடு முழுவதும் பதிவு  செய்துள்ள 32 கோடி தொழிலா ளர்களுக்கும் ஆண்டுக்கு 100 வேலை நாட்கள் வழங்க 3.63 லட்சம் கோடி தேவை. இது கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி வரிச்சலுகை களில் பாதி தொகையைவிட குறை வாகும். 2005 செப்டம்பரில் இடதுசாரி களின் ஆதரவுடன் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேலை உறுதிச் சட்டம், நாட்டில்  வறுமை ஒழிப்பில் சாதகமான பங்கைக் கொண்டிருந்தது. இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கூட, வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பங்க ளிப்பு குறைக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், அது வேகம்  பிடித்தது. புதிய உத்தரவு நாட்டில்  உள்ள 16.06 கோடி குடும்பங்களை மீண்டும் கடும் வறுமையில் தள் ளும்.