சென்னை, டிச.16- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஞாயிறன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது உருவாகவில்லை. இந்த நிலையில், திங்களன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் கணித் திருந்தது. அதன்படி, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி யுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, செவ்வாய்க் கிழமை கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளிலும் இடி மின்னலு டன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், நாகப்பட்டினம், திருவாரூர், கட லூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதன்கிழமை கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியில் கனமுதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன மழையும் பெய்யக் கூடும் என வானி லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.