tamilnadu

img

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: சில மாவட்டங்களில் கன மழை பெய்யும்

சென்னை, நவ. 17-  தமிழகத்தில் 20 மற்றும் 21 தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை காலை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை  ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதி களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக் கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். வெள்ளிக்கிழமை (நவ. 18) தமிழ் நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 19 ஆம் தேதி கடலோர தமிழ கம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை (நவ. 18) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல்  பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக ளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தி லும் இடையிடையே 55 கி.மீ வேகத்தி லும் வீசக்கூடும். சனிக்கிழமை (நவ. 19) இலங்கை  கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறா வளிக்காற்று மணிக்கு 40 முதல் 45  கி.மீ  வேகத்திலும் இடையிடையே 55  கி.மீ   வேகத்திலும் வீசக்கூடும்.  இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதி களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.