திருநெல்வேலி, ஜூலை 21- தமிழக சபாநாயகர் அப்பாவு நெல் லையில் வியாழக்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக தமி ழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளார். நான் இன்னும் சென்னை செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு கடிதத்தை படித்து பார்த்து சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பி னர்களை எந்தெந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பாக வும் அவர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை பரிசீலித்து நடவ டிக்கை எடுப்பேன். அதிமுக தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு. நீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து நாங்கள் பேச மாட்டோம். சட்ட மன்ற நிகழ்வுகள் குறித்து மட்டும் முடிவு செய்வேன். ஜனநாயக ரீதியில் சட்டமன் றம் நடைபெற்று வருகிறது. எனவே ஜன நாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.