tamilnadu

img

22 ஆவது முறையாக மகத்தான வெற்றி

கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் 22ஆவது முறையாக இந்திய மாணவர் சங்க (எஸ்எப்ஐ) வேட்பாளர்கள்  அமோக வெற்றி பெற்றுள்ளனர். எம்ஜி பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த ராகுல் மோன் ராஜன் தலைவராகவும், பத்தனம்திட்டா கிராமப்புற  மேலாண்மை கல்லூரியின் அஜின் தாமஸ் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆதித்யன் வினோத் (புல்லரிக்குன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்), அனகா சூசன் பிஜு (கோட்டயம் ஸ்கூல் ஆஃப் இந்தியன் லீகல் த்ஹாட்) மற்றும் ஸ்ரீஹரி (கட்டப்பனா அரசு கல்லூரி) ஆகியோர் துணைத் தலைவர்களாகவும்,  பி.எஸ்.ஆதில் (மாலியங்கரா எஸ்.என்.எம். கல்லூரி), எஸ்.விக்னேஷ் (கந்தலூர் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி) ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கேஎஸ்யுவுக்கு 2 செயற்குழு இடங்கள் மட்டுமே கிடைத்தன. ‘ஆக்கப்பூர்வமான அரசியல்; வகுப்புவாதத்திற்கு எதிராக மதச்சார்பற்ற கல்லூரி’ என்ற முழக்கத்துடன் தேர்தலை எஸ்எப்ஐ எதிர்கொண்டது.