நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதன்படி ஞாயிறன்று அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் கூட்ட அறையில் மழைக்கால கூட்டத் தொட ருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாய கர் பதவி வழங்குவது, நீட் விவகாரம், அமலாக்கத்துறை போன்ற மத்திய புல னாய்வு அமைப்புகளை தவறாக பயன் படுத்துவது, கன்வார் யாத்திரை வழித் தடங்களில் உள்ள கடைகள், ஹோட்டல் கள் மற்றும் தள்ளுவண்டிகளில் உரிமை யாளர் மற்றும் பணியாளர்களின் பெயர் களை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரப்பிரதேச பாஜக அரசின் உத்தர வுக்கு எதிராக “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்ததால் அனைத்துக் கட்சி கூட்டம் அனல் பறந்தது. ஐக்கிய ஜனதா தளமும்... பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எழுப்பிய போது, ஒன்றிய அமைச்சர்கள் எதுவும் பேசாமல் மவுனம் காத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை எழுப்பாத நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இதே கோரிக்கையை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.