tamilnadu

img

மும்பையில் மீண்டும் ஒரு மதநல்லிணக்க நிகழ்வு

பாஜக கும்பல் அதிர்ச்சி

மும்பைக்கு அருகே உள்ள மலாட் - மல்வானியில் இந்துத்துவா குண்டர்களால் அரங்கேற்றப்பட்ட ராமநவமி கலவரத்தால் அப்பகுதி கடந்த ஒரு மாத காலமாக பதற்றமான பகுதியாக, இயல்பு நிலை இழந்து காணப்பட்டது. பாஜகவின் வெறுப்பு அரசியலின் ஆதாயம்தான் இந்த கலவரம் என்பதை உணர்ந்த மலாட் - மல்வானி பகுதி வாழ் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்,சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் என அனைத்து மத மக்கள் அனைவரும் ஒன்றாக ஆலோசித்து,”நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்” என்பதை உணர்த்த ராமநவமி கலவரம் நடைபெற்ற பகுதியில் பிரம்மாண்ட ஒற்றுமை பேரணியை நடத்தினர். இந்த அமைதிப் பேரணியால் ஆளும் பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணி கடும் அதிர்ச்சி  அடைந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது மும்பை வாகன ஓட்டுநர்கள்  ஒன்றாக கூடி இப்தார்  கொண்டாடியது பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணிக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை, ஏப். 21- மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்நாட்டு விமான நிலைய முனை யத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கடந்த புத னன்று ஏர்போர்ட் ஏவியேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் (ஏஏஇயு) சார்பில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த இப்தார் விருந்தில் மும்பையின் அனைத்து மூலைகளிலிருந்தும், அனைத்து மதங்களையும் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட ஓட்டுனர்களுக்கு ஒற்றுமைக் கான வாசகங்கள் பொருந்திய துண்ட றிக்கைகளுடன், ரோஜாப் பூ வழங்கி வரவேற்றது விழாக்குழு (ஏஏஇயு).  விருந்தில் சமோசா, ஜிலேபி, பழங்கள், கபாப் என எளிய உணவு கள் மட்டுமே பரிமாறினாலும், அனைத்து மத ஓட்டுநர்களும் கூட்டாக இப்தார் சடங்குகளையும் செய்து, உறவினர்கள் போன்று நலம் விசாரித்து பாடலுக்கு ஏற்ப நடன மாடி ஆரவாரம் செய்ததால் உள்நாட்டு விமான நிலைய முனைய வாகன நிறுத்துமிடம் பிரம்மாண்ட திருவிழா போன்று களைகட்டியது.

‘நான் வீட்டிற்குள் மட்டுமே பிராமணன்’

இப்தார் விருந்தில் கலந்து கொண்ட ஓட்டுநர் ஒருவர் ‘சப்ரங்  இந்தியா’- இணைய இதழின் செய்தி யாளரிடம் தன் பிறப்பால் பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு கூறியதாவது: “தொழிற் சங்கம்தான் எனக்கு எல்லாமே. உரிமைக்காக பேசும் சக்தியை தொழிற்சங்கம் அளிக்கிறது.  வாக னம் ஓட்டும் பொழுது இடையூறு ஏற் பட்டால், தொழிற்சங்கத்தினர்தான் எங்களுக்கு உதவ முன்வரு கிறார்கள். நான் ஒரு பிராமணன். இது என் வீட்டிற்குள்ளும், என் தனிப்பட்ட வாழ்விலும் மட்டுமே தவிர, வேளியே அதாவது  இங்குள்ள எல்லோரையும் (ஓட்டுனர்களையும்) போல ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் பிரிவினை அரசியல்தான் நம்மை பிரிக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

சீக்கியர்கள் பாராட்டு

நவி மும்பையில் உள்ள கார்கரில் இருந்து வந்த சீக்கிய ஓட்டுநர்கள் அனைத்து மதத்தினரின் இப்தார் விருந்து முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர். அதில் ஒருவர் “குடிமக்களிடையே பரவலான ஒற்றுமை இருக்கும்போது சிலர்  செயற்கையான பிளவை உருவாக்க விரும்புகிறார்கள்.அதனைத் தடுக்க வேண்டும்” என்று கொந்தளித்துக் கூறினார்.

இந்து மஸ்தூர் சபா தலைவர் 

இப்தார் விருந்தில் கலந்து கொண்ட இந்து மஸ்தூர் சபாவின் தேசியக் குழு உறுப்பினரான அம்போன்கர், “இந்த ரோஜாவைப் பாருங்கள். ஒற்றுமையின் சின்ன மாக இப்போது நம் கையில் உள்ளது. அதே போல் தேசத்தின் ஒற்றுமை யை நிலைநாட்டுவது நம் கை யில்தான் உள்ளது” எனக் கூறினார். ஏஏஇயு தலைவர் ஜாதவ், “ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நிகழ்விற்கு எங்கள் இடம் கிடைக்கும். நான் ஒரு முக்கியமற்ற நபர் என்றாலும், இந்த புனித மான பணி மூலம் மக்களை ஒன்றி ணைக்கும் இந்த முயற்சியை நான்  எப்போதும் ஆதரிப்பேன், ஆதர வாக இருப்பேன்” எனக் கூறினார்.