tamilnadu

கடவுளை கட்சிக்கு இழுத்து   அரசியல் செய்யும் கும்பல்!'

கடவுளை கட்சிக்கு இழுத்து   அரசியல் செய்யும் கும்பல்!'

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கண்டனம்

சென்னை, ஜூன் 22 - மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணியின் பண்பாட்டு  படையெடுப்பு மாநாட்டில் தமிழ் முருகனை சனாதன முருகனாக மாற்றியதாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கையில், “மாநாட்டு திடலில் முருகன் சிலையை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யாமல், அரசி யலுக்காக பொருட்காட்சி பொம்மைபோல் வைத்து பூஜை  செய்வது முருகக் கடவுளை இழிவு செய்வதாகும்” என்று கூறி யுள்ளார். “சக்தி இல்லாத இந்து முன்னணியின் முருகன் பொம்மை  சிலையை, மக்களை வணங்க வைப்பது பக்தியின் பெயரி லான மோசடி. ஆகமங்களின் மீதான நேரடி அத்துமீறல். ஆக மத்தின் பெயரால் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட இந்துக்களை அறுபடை வீடுகளில் பூஜை செய்ய விடாமல் தடுக்கும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சார்யார்கள், குருக்கள் உள்ளிட்ட வைதீக சாதியினர், இந்து முன்னணி மாநாட்டில் ஆகம விதிகள் மீறப்படுவதை கண்டு கொள்ளா மல் இருந்தது ஏன்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயிலை மாற்றி,  வள்ளி என்ற குறவர் சமூகப் பெண்ணை மணந்த சமத்துவ  முருகனுக்கு பூணூலை மாட்டி, முருகன் பெயரை சமஸ் கிருதத்தில் மாற்றி, தமிழர்களை ஆறுபடை வீடுகளில் இருந்து  வெளியேற்றி, தமிழ் முருகனை சனாதன முருகனாக மாற்றி,  முருகனையே களவாடிய கூட்டம், தற்போது அரசியலுக் காக, மதவெறியைத் தூண்டி, மக்களிடையே பிளவை உரு வாக்க முருக வேலை, சூலாயுதமாக மாற்றி, கையில் தூக்கி  வருகிறது” என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.