tamilnadu

img

சிபிஎம் வேட்பாளரை கடத்தி கொலை செய்ய பாஜக சூழ்ச்சி

கொடிய ஆயுதங்களுடன் வந்த கூலிப்படை கும்பல் சிக்கியது

பாகேபள்ளி, மே 8 - கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அனில்குமாரை கடத்தி படு கொலை செய்ய முயற்சித்த பாஜகவின் சதிச்செயலை மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழி யர்கள் முறியடித்தனர். இதைத்தொடர்ந்து பாஜகவை அம்பலப்படுத்தி பாகேபள்ளியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.  கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாகேபள்ளி, கல்புர்கி, கே.ஆர்.புரம், கே.ஜிஎப்(கோலார் தங்க வயல்) ஆகிய தொகுதிகளில் போட்டியிடு கிறது. இத்தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர் களுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வரு கின்றனர். குறிப்பாக பாகேபள்ளி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அனில்குமார் வெற்றிபெறுவது உறுதி என்ற  நிலை உருவாகியுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கைக் கண்டு ஆத்திரமடைந்துள்ள பாஜக, அவரை கடத்தி படுகொலை செய்யும் நோக்கத்துடன் கூலிப்படை கும்பலை அனுப்பி வைத்தது. அந்தக் கும்பலை கட்சியினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

வேட்பாளர் அனில்குமார், ஞாயிறன்று இரவு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பாகேபள்ளியில் உள்ள தமது வாடகை இல்லத்திற்கு திரும்பினார். அவருடன் கட்சித் தோழர்களும் வந்தனர். அவரது இல்லம் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. ஆனால் தரைதளத்தில் இதுவரை அங்கு இருந்திராத 30க்கும் மேற்பட்ட கும்பல் திடீரென முற்றுகையிட்டிருந்தது. அவர்கள் யார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் விசாரித்த போது முன்னுக்குப் பின் பதில் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்களை சோதிக்க முற்பட்ட போது கொடிய ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர். வேட்பாளர் அனில்குமாரை இரவு நேரத்தில் கடத்திச் செல்லவும் அடை யாளம் தெரியாத பகுதிக்கு கொண்டு சென்று  படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் உடனடியாக கட்சியினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.  மிகவும் கடுமையான மோதல் போன்ற சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் கட்சியின ரும் திரண்டதால் பாஜகவின் கூலிப்படை யினரில் சிலர் தப்பி ஓடினர். 19 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் களது உடமைகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்த போது கூர்மை யான கத்திகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்கள் சிக்கின. இவர்கள் இந்தப்  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது. பாஜக தரப்பிலிருந்து வெளி யூர்களில் இருந்து கூலிக்காக அமர்த்தப்பட்ட கிரிமினல் கும்பல் என்பதும் தெரியவந்தது

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரை குறி வைத்து கடத்தி படுகொலை செய்ய முயற்சித்த பாஜகவின் இந்த இழிசெயலுக்கு கட்சியின் கர்நாடக மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில செயலாளர் யு.பசவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகேபள்ளி தொகுதியில் தோழர் அனில்குமார் வெற்றிபெறுவது உறுதி என்ற நிலையில் பாஜக ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது; வாக்குப்பதிவையொட்டி தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. வேட்பாளர் அனில்குமாரை கடத்தவும் படுகொலை செய்யவும் நடந்த இந்த முயற்சியையும் பாஜகவின் இதர சூழ்ச்சித் திட்டங்களையும் காவல்துறை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; வேட்பாளர் அனில்குமாருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து கர்நாடகா முழு வதும் வலுவான போராட்டத்தில் ஈடுபடுமாறும் கட்சி அணிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.