தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருவாய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜ்குமார் (47வயது). இவர், குறுவை சாகுபடி செய்திருந்த 30 ஏக்க ரும் தண்ணீரின்றி முற்றிலும் காய்ந்து கரு கின. செப்டம்பர் 25 அன்று வயலுக்குச் சென்று கருகிய பயிரைக்கண்ட போது, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரண மடைந்தார். டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்த குறுவைப் பயிரை காப்பாற்ற காவி ரியில் தண்ணீர் கிடைக்காத நிலையில் இதுபோன்ற அதிர்ச்சி மரணங் களை தடுப்பதற்கு மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவா ரணத்தை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். அதிர்ச்சி மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட முன்வர வேண்டும். இதுபோன்ற நிலையை விவசாயிகள் நம்பிக்கையோடு எதிர் கொள்ள வேண்டும்.