tamilnadu

img

ஹிரோஷிமா, நாகசாகியை விட காசா அழிவு பயங்கரம்!

ஹிரோஷிமாவின் முதல் அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த குழந்தை, இன்று முதியவராக காசா வின் நிலையை ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரே லின் காசா மக்கள் படுகொலையை முடிவுக்கு கொண்டுவர இது முக்கியமானது. நிஹான் ஹிடான்கியோ என்ற, ‘அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தோர் குழு’ வின் தலைவர் டோஷியுகி மிமாகி, 2024 நோபல் அமைதி விரு தைப் பெற்றுள்ளார். இவர், அக்டோபர் 11 அன்று டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “காசாவின் குழந்தைகள் இரத்தம் சிந்துவது, 80 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானை நினை வூட்டுகிறது” என்று குறிப்பிட்டார். காசாவில் கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் மேற் கொண்டு வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களில் சுமார் 2,00,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் காசாவில் நேரடி மற்றும் மறைமுக மரணங்கள் 1,86,000 ஆக இருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். காசாவின் 140 சதுர மைல் பரப்பளவில் 80%  பகுதி அழிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள், மருத்துவ மனைகள், பள்ளிவாசல்கள் என அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் 10% கட்டிடங்களே அழிக்கப்பட்டன. ஆனால் காசாவில் 30% கட்டி டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றைய நவீன ஆயுதங்களின் அழிவுத் திறன் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டுகளை விட பல மடங்கு அதிகம். எனவே ஹிரோஷிமாவில் உயிர் பிழைத்தவரின் எச்சரிக்கையை உலகம் கவனத்தில் கொண்டு, காசாவில் நடைபெறும் மக்கள் படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். - மௌங் சார்னி   (பர்மிய இனப்படுகொலை ஆய்வாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்)     தி வயர் இணைய ஏட்டில் எழுதியுள்ள  கட்டுரையில் இருந்து...