புதுதில்லி, ஜூலை 20- மொகரம் பண்டிகை ஊர்வலத்தின் போது பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து பாலஸ்தீனர்களுக்கு ஆத ரவு தெரிவித்த மக்கள் மீது போடப் பட்ட ‘உபா’ சட்டத்தின் கீழான கிரி மினல் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க் சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர், பீகார், மத்தியப் பிர தேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்களில் மொகரம் பண்டிகை ஊர்வ லத்தின் போது பாலஸ்தீனக் கொடி களை அசைத்தவர்கள் மீது பாஜக மற் றும் விஎச்பி தலைவர்கள் அளித்த புகார் களின் பேரில், சட்டவிரோத நடவடிக்கை கள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) ஆகிய சட்டங்களின் கடுமையான பிரிவு களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள செய்திகள் வந்துள்ளன. இந்த வழக்குகள் பதிவு செய்யப் பட்ட மாநிலங்கள் பெரும்பாலானவை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களாலும் ஒன்றிய அரசின் நேரடிக் கட் டுப்பாட்டின் கீழும் ஆளப்படுகின்றன. வெளிப்பட்ட பாஜகவின் ‘உண்மை முகம்’ பாஜக தலைமையிலான அரசு பாலஸ்தீன அரசை ஆதரிப்பதாக கூறு கிறது. ஆனால் இந்த வழக்குப் பதிவு கள் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறது. பாலஸ்தீனத் திற்கு இந்திய மக்கள் ஆதரவளிப்பதை அவர்களால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசு பாலஸ்தீனத்துக்கான தனது ஒற்றுமை யை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி வெளிப்படுத்த வேண்டும். 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகள் மற் றும் கிழக்கு ஜெருசலேமைத் தலைநக ராகக் கொண்ட இஸ்ரேல் ஆக்கிரமித் துள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியேறி பாலஸ்தீன நாட்டை அமைக்க இந்தியா வலியுறுத்த வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் பாலஸ்தீன ஆதரவுக்காக போடப் பட்ட ‘உபா’ சட்டத்தின் கீழான வழக்கு களை பாஜக அரசு திரும்பப் பெற வேண் டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரி வித்ததற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடு விக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.