இந்த புத்தகத்தில் 6 குட்டிக் கதைகளை 6 பெண் எழுத் தாளர்கள் படைத்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக் கிறது. ஆரோக்கியம் என்பது நமது சிறுவயது உணவு பழக்க வழக்கத்தில் இருந்து துவங்கு கிறது. ஆனால் வருத்தம் என்ன வென்றால் இப்போது ஜங்க் புட், பாஸ்ட் புட் போன்ற உணவு வகைகளுக்கு சிறார் முதல் முதியோர் வரை அடிமையாகி விட்டோம் என்பதே நிதர்சனம். காய்கறிகள் சமைக்க, சாப்பிட நாம் யாரும் இப்போது எல்லாம் முன் வருவதில்லை. ஏன் காய்கறிகள் சாப்பிட வேண்டும்? காய்கறிகள் சாப் பிட்டால் என்ன பயன்? பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி காய்கறிகள் பற்றி எப்படி சொல்வது? வருங்காலத்தில் மாண வர்கள் நடப்பார்களா? மூவிங் சேரில் யார் பய ணிப்பார்கள்? பாடல் வழியே காய்கறி கள் பற்றி சொல்ல முடியுமா? காய்கறிகள் பேசுமா? ஒருவேளை காய்கறிகள் உரையாடினால் அவர்களின் உரையாடல், விவாதம் எப்படி இருக்கும்? புடலங்காய் ஏன் அழுதது? காய்கறிகள் பாஷையாருக்கு புரிந்தது? கௌதம் என்ன சாப்பிட்டான்? மலச்சிக்கல் வர காரணம் என்ன? பிரம்மா யாரை ஏமாற்றி னார்? உடம்புக்கு கசப்பு சுவை தேவையா? உருளைக் கிழங்கு “க்ரீன் கோர்ட்” இல் ஏன், யார் மேல் வழக்கு போட்டது? தீர்ப்பு யார் பக்கம்? இதற்கு எல்லாம் பதிலாக இந்த படைப்பு இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான இளம் சமுதாயத்தை உரு வாக்க வேண்டும் என்ற உத்வே கத்துடன் ஆறு எழுத்தாளர் கள் இணைந்து அறுசுவை யாக படைத்துள்ள புத்தகம் இது. வாசித்து சுவைக்க.
புத்தகம்: உருளைக் கிழங்கு செல்லக்குட்டி
எழுத்தாளர்கள்:
1. பார்வதி நாகமணி
2. உமா அபர்ணா
3. வசந்தி ஜனார்த்தனன்
4.சுபஸ்ரீ ரவிச்சந்திரன்
5 மேல்மங்கலம் வி. சியாமளா
6.காயத்ரி முரளிதரன்
வெளியீடு: பேக்கிடெர்ம் நிறுவனம்
விலை : ரூ.50
சென்னை 40
9884467730