மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 102 வயதாகும் ரவீந்திர குமார் நாத் தனது சேமிப்பு முழுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழுவுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான முகமது சலீம், ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஊக்கமூட்டும் செயல்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலம் பெறுகிறது; தோழர் ரவீந்திர குமார் நாத் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என முகமது சலீம் கூறினார்.