tamilnadu

img

மாநில அரசின் உரிமையை தக்க வைக்க ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும்

சென்னை, செப். 1 - மாநில அரசின் உரிமையை தக்க வைக்க ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னத்தின் தலைவர் தி.தமிழரசு வலியுறுத்தி உள்ளார். சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 19வது பொதுப் பேரவை ஞாயிறன்று (செப்.1) கேரள சமாஜம் பள்ளியில் நடைபெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் தி.தமிழரசு கூறியதாவது: கேரளாவை போன்று, தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களை, தமிழ்நாடு மாநில  தலைமை கூட்டு றவு வங்கியுடன் இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ யை உருவாக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை ஒன்றிய அரசு பல்வேறு முறைகளில் பறித்து வரு கிறது. கூட்டுறவு வங்கிகளையும் பறிக்க முயற்சித்து வருகிறது. எனவே, கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்தி, மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே நீட்டிக்கச் செய்ய வேண்டுமானால், ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும். 120க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு வங்கி களை 10 மண்டலங்களாக பிரித்து, ஒருங்கி ணைத்து பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். மாவட்ட வங்கிகளில் வைக்கப் படும் வைப்பு நிதிகளுக்கு வட்டி மிக குறை வாக வழங்கப்படுகிறது. வங்கியின் பலத்தை  கணக்கில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டும். மாவட்ட, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்க ளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பதவியை நேரடியாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கருணை ஓய்வூதியமாக ரூ.5500 வழங்கப்படுகிறது. ஓய்வூதிய நிதியத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ளது. ஒரு குழு அமைத்து, ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். அது, பழைய ஓய்வூ திய திட்டத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். சங்கத்தின் தலைவர் எம்.ராஜகேசி தலை மையில் நடைபெற்ற இந்த பொதுப் பேர வையை இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் (பெபி) மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். செய லாளர் அறிக்கையை துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செந்திலும், வரவு, செலவு அறிக்கையை பொருளாளர் கே.ஸ்டாலினும் சமர்ப்பித்தனர். கூட்டுறவு சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன், பெபி மாநிலத் தலைவர் சுனில் குமார், முன்னாள் நிர்வாகி எஸ்.வி.வேணு கோபாலன், சங்கத்தின் உதவித்தலைவர் வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகிகள் சங்கத்தின் கவுரவ தலைவராக எம்.ராஜ கேசி, தலைவராக டி.எட்வர்ட் ஜான் ராஜா,  பொதுச் செயலாளராக ஜெ.சந்திரகுமாரி பொன்னுத்தாய், பொருளாளராக எஸ். செந்தில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட் டனர்.