95.03 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி! 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
சென்னை, மே 8 - தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன. அதன்படி, 95.03 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.47 விழுக்காடு அதிகமாகும். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, 91.94 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 துவங்கி 25-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடை பெற்றது. 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவியர், 3 லட்சத்து 73 ஆயி ரத்து 178 மாணவர்கள் உட்பட மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வை எழுதினர். 10 ஆயிரத்து 49 மாணவர்கள் தேர்வில் பங்கேற்க வில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில், தேர்வெழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ - மாணவி யரில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாண வர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.03 விழுக்காடு ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.47 விழுக்காடு கூடுதலாகும்.
மாணவிகள் முதலிடம்
மாணவர்கள், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர்- அதாவது, 93.16 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி யரைப் பொருத்தவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.03 ஆகும். இந்த ஆண்டும் மாண வர்களை விட மாணவியர் 3.54 விழுக் காடு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகள் 100க்கு 100 வெற்றி
தமிழ்நாட்டில் மொத்தம் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 513 மேல்நிலைப் பள்ளிகளில் 2,638 மேல்நிலைப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 436 அரசுப் பள்ளி கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள் ளன. மொத்தமாக அரசுப் பள்ளி கள் 91.94 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71, தனியார் சுய நிதிப் பள்ளிகள் 98.88 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளி கள் 95.30 விழுக்காடும், பெண்கள் பள்ளிகள் 96.50 விழுக்காடும், ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள் 90.14 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளன.
முதல் 5 இடம் பிடித்த அரசுப் பள்ளிகள்
அரசுப் பள்ளிகளை பொறுத்த வரை, அரியலூர் 98.32 விழுக்காடு, ஈரோடு 96.88, திருப்பூர் 95.64, கன்னியா குமரி 95.06, கடலூர் 94.99 விழுக்காடு என தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரி யலூர் மாவட்டம் 98.82 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்திருக்கிறது. ஈரோடு 97.98, திருப்பூர் 97.53, கோயம்புத்தூர் 97.4, கன்னியாகுமரி 97.01 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. பாட வாரியாக அறிவியல் பாடப்பிரிவு களில் 96.99 விழுக்காடு, வணிகவிய லில் 92.68 விழுக்காடு, கலைப் பிரிவு களில் 82.90 விழுக்காடு, தொழிற் பாடப் பிரிவுகளில் 84.22 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பழனி மாணவி அசத்தல்
பழனியை சேர்ந்த மாணவி ஓவி யாஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் ஆங்கிலத்தில் மட்டுமே 99 மதிப்பெண்கள் எடுத்துள் ளார். மற்ற அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் 100க்கு 100 பெற்றிருக்கிறார்.
“இது தேர்வு மதிப்பீடு மட்டுமே; முடிவல்ல”
முதல்வர்- அமைச்சர் அறிவுரை தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. தேர்வு முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தார். மேலும், “தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளை காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase (வளர்ச்சிக் கட்டம்) அமையவுள்ளது என்ற positive outlook-உடன் (நேர்மறையான பார்வையுடன்) இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்” என குறிப்பிட்ட அவர், பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாக துணை நில்லுங்கள்!” என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதேபோல் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்; உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.