திண்டுக்கல் மாணவி நந்தினி மாநில அளவில் சாதனை
பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் - பானுப்பிரியா தம்பதியரின் மகள் எஸ்.நந்தினி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். திங்களன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், பொருளா தாரவியல், வணிகவியல், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் என ஆறு பாடப்பிரிவுகளிலும் தலா 200 மதிப்பெண்கள் பெற்று (600-க்கு 600) மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். தமது சாதனை குறித்து நமது செய்தி யாளரிடம் பேசிய நந்தினி, “எனது படிப்புக்கு முதல் ஊக்கம் கொடுத்தவர் எனது தாய். 600க்கு 600 மதிப்பெண் பெற்று எல்.கே.ஜி. முதல் பயின்ற எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறேன்.
ஆடிட்டராக பணியாற்று வது தான் என் நோக்கம். எனது சாதனைக்கு என் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் தந்த ஊக்கம் தான் காரணம்” என்றார். தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெறு வதற்கு முழுக் காரணம் எனது தமிழ் ஆசிரி யர் அனுராதாம்மா. எனக்கு இன்னொரு தாய் போல அவர் இருந்தார். என் தந்தை கூலித்தொழிலாளி. என் குடும்பத்தினர் என் படிப்புக்காக எப்போதும் ஒத்துழைத்தார்கள். என் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த உற்சாகம் எனது வெற்றிக்குக் கார ணமாக அமைந்துள்ளது. கூலித்தொழிலாளி யின் மகள் என்பதால் நாம் என்ன சாதித்து விடப் போகிறோம் என்று நினைக்கவில்லை. நம்மாலும் சாதிக்க முடியும் என்பது எனது இலக்காக இருந்தது என்றும் அவர்கூறினார். நந்தினி மாநில அளவில் முதல் மாணவி யாக தேர்ச்சி பெற்றதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
சென்னை, மே 8- தமிழகத்தில் பிளஸ் - 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23 ஆயி ரத்து 747 தனித் தேர்வர்கள், 5 ஆயிரத்து 206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 90 சிறைவாசிகள் என ஒட்டு மொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந் தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கி 21ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணை யதளத்தில் மதிப்பெண் பதி வேற்றம் உள்பட இதர பணி களும் முடிக்கப்பட்டுவிட் டன. விடைத்தாள் திருத்து தல் பணியில் சுமார் 50 ஆயி ரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ்-2 தேர்வு முடிவு களை மே 5-ந்தேதி வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந் தது. அதன் பின் நீட் தேர்வை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு மே 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாணவிகள் முதலிடம்
அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற் றாண்டு நூலக வளாகத்தில் திங்கட்கிழமை (மே 8) காலை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சே ரியில் பிளஸ் - 2 பொதுத்தேர் வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்ச த்து 82 ஆயிரத்து 371 மாண வர்களும் தேர்வு எழுதி னார்கள். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.03 விழுக்காடு ஆகும். மாணவர்களைவிட மாணவி களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 4 லட்ச த்து 5 ஆயிரத்து 753 மாண விகள் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 96.38 விழுக்காடு ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 91.45 விழுக்காடு ஆகும். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்து உள்ளார். மாண வர்களை விட மாணவிகள் 4.93 விழுக்காடு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ள னர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.76 ஆகும். தமிழகத்தில் 7 ஆயிரத்து 533 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2767 ஆகும். 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326ஆகும். பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைபெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 308 பேரில் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.85 விழுக்காடு தேர்ச்சியாகும். திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 24 ஆயிரத்து 732 பேரில், 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.79 விழுக்காடு தேர்ச்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 391 பேரில் 7 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.59 விழுக்காடு தேர்ச்சி ஆகும். இவ்வாறு அவர் கூறினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டண மின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடி வுகள் அவர்கள் பதிவு செய்த கைப் பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழி யாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு களில் தேர்ச்சியடைந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், தேர்ச்சிபெறத் தவறியோ ரும் திரும்ப முயன்றால் வெற்றி சாத்தியமே, இதுவே இறுதி என்றில்லை. உயர்கல்வியை சரியாக தேர்வு செய்து மென்மேலும் உயர அனைவருக்கும் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.