புதுச்சேரி, மே 8- புதுவையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று (மே 8) வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்கள், 7 ஆயிரத்து 542 மாணவிகள் என மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு களை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கட்கிழமை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 92.67 விழுக்காடாகும். கடந்த ஆண்டு 96.13 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 3.46 விழுக்காடு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. புதுவை அரசு, தனி யார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாண விகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள் ளனர். புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 விழுக்காட்டினரும், காரைக்காலில் 83.66 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 56 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவை, காரைக்காலில் மொத்தமுள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் ஒரு வர், இயற்பியலில் 6 பேர், வேதியிய லில் 80 பேர், உயிரியலில் 38 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 132 பேர், கணிதத்தில் 8 பேர், தாவரவியலில் 6 பேர், விலங்கியலில் 4 பேர், பொருளியலில் 37 பேர், வணிகவிய லில் 157 பேர், கணக்கு பதிவியலில் 138 பேர், வணிக கணிதத்தில் 39 பேர், வரலாற்றில் ஒருவர், கம்ப்யூட் டர் பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.