tamilnadu

கேரளத்தில் ஓய்வூதியத்துக்கு 900 கோடி ஒதுக்கீடு

திருவனந்தபுரம், நவ. 9- கேரளத்தில் ஒரு மாத சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் அறிவித்தார்.  ஓய்வூதியம் நேரடியாக பெறுபவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், மற்றவர்கள் வங்கி கணக்கு மூலமாகவும் தொகை பெறுவார்கள். இதற்காக சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டுகளில், எல்.டி.எப் அரசுகள் நல ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ரூ.57ஆயிரத்து604 கோடி வழங்கியுள்ளன. இரண்டாவது பினராயி அரசு ரூ.22ஆயிரத்து250 கோடி கொடுத்தது. ஓய்வூதிய தரவுத் தளத்தில் 64 லட்சம் பேர் உள்ளனர். பட்டியலில் உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு பட்டியலிடல் முடிந்த மாதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.