இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு இப்போது தான் ஒடிசாவில் மல்கான்கிரி, ராயகடா, கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட் டங்களில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் வசிக்கும் 81 கிராமங்கள் மின்சாரத்தையே பார்த்துள்ளன. பிஜு கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 139 பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் தற்போது 81 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள் ளது. இருப்பினும் பெரும்பாலான மலைக் கிராமங்களுக்கு சூரிய ஒளி மின்சாரமும் வழங்கப்படுகிறது. இது குறித்து ஒடிசா மாநிலம் மல்கான் கிரி மாவட்டம் கைர்புட் தொகுதிக்குட்பட்ட போண்டா மலையில் உள்ள தனது சிறிய வீட்டில் வசித்துவரும் சுக்ரா முதுலி என்ப வர் கூறுகையில், ”முன்பு எனது கிராமம் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கி யது. என் வாழ்நாளில் இப்படி ஒரு மாற் றத்தை நான் நினைத்துக்கூட பார்த்தி ருக்க முடியாது. மாலையில் என் சொந்த ஊர் ஒளிர்வதைக் காண்பது உண்மையி லேயே மனதுக்கு இதமாக இருக்கிறது.
மின்சாரம் கிடைத்த பின் எனது பேரக்குழந் தைகள் உற்சாகமாக படிக்கின்றனர். அது மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும் எங்க ளது மக்களும் இரவு நேரங்களில் வன விலங்குகளின் அச்சத்திலிருந்து தப்பி யுள்ளனர்” என்றார் கண்களில் நீர் வழிந்தோட. இந்தியாவில் குறிப்பாக மிகவும் மோசமான நிலையில் வாழும் பழங்குடியினர் குழுக்கள் 75 உள்ளன. இவர்களில் 13 குழுக்கள் ஒடிசாவில் உள்ள 12 மாவட்டங்களில் 542 கிராமங்க ளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு டிபி தெற்கு ஒடிசா மின் பகிர்மானக் கழகம் மின்வசதி செய்து தருவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டதாக தெரி விக்கின்றனர் பழங்குடி மக்கள். டிபி தெற்கு ஒடிசா மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் கார்க் கூறுகையில், பழங்குடியின மக்களுக்கு மின்சாரம் கிடைத்திருப்பதன் மூலம் அவர்களது வாழ்வியல் மாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளா தாரத்திலும் அவர்கள் மேம்படுவர். சமீபத்தில் மின்சாரம் கிடைக்கப்பெற்ற 61 கிராமங்களில் 44 கிராமங்கள் மல்கான் கிரியில் உள்ளன. பழங்குடி மக்கள் மின் கட்டணத்தை குறித்த நேரத்தில் செலுத்து கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தலா ரூ. 1லட்சம் வசூலிப்பதன் மூலம் மார்ச் மாதத்தில் அடைய வேண்டிய இலக்கை எட்டுவோம் எனக் கூறிய அவர். 2020-ஆம் ஆண்டு முதல் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் டிபி தெற்கு ஒடிசா மின்பகிர்மானக் கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.