மதுரை, ஜன.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் முன்னாள் மாவட்டச் செய லாளர் மறைந்த தோழர் இரா. ஜோதிராம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டு நிதியளிப்பு நிகழ்ச்சி கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகு திக்குழு சார்பில் வியாழ னன்று ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பகுதிக் குழுச் செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப் பினர்கள் கே. பாலபாரதி, இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ம.பாலசுப்பிரமணி யம், ஆர். சசிகலா, மாவட்டக் குழு உறுப்பினர் டி. நாகராஜ் ஆகியோர் புகழஞ்சலி செலுத்திப் பேசினர். மதுரையில் நடைபெற வுள்ள கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டு நிதியாக மதுரை மாநகர் மக்களிடம் திரட்டப்பட்ட முதற்கட்ட நிதி ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்து 500-ஐ மாநிலக்குழு உறுப்பி னர் கே. பாலபாரதியிடம் பகு திக்குழு செயலாளர்கள் வழங்கினர்.