திருவாரூர், நவ.18- திருவாரூர் மாவட்டம், குட வாசல் ஒன்றியம் சித்தாடி கிராமத் தில் மக்கள் தலைவர், களப் போராளி தோழர் கோ.வீரய்யன் 6ஆம் ஆண்டு மலரஞ்சலி-நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தாடி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தோழர் வீரய்யனின் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர் மாலை வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், வாலிபர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஏ.கே. வேலவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், வர்க்க வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள் எஸ்.தம்புசாமி, ஜீ.வெங்கடேசன், கே.பி. ஜோதி பாசு, எம்.எஸ்.ஜெய்கிஷ் உள்ளிட்ட மற்றும் கட்சியின் மாவட்டக் குழு, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். மேலும் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு அலுவலகம், குடவாசல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தோழர் வீரய்யன் உருவப்படத்திற்கும், ஸ்தூபிக்கும் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட, பகுதி தலைவர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.